Wednesday, December 13, 2006

படித்ததில் பிடித்தது(2)

காடுகளும் வழித்துணைகளும்

மூன்று பேர்கள்
அமர்ந்திருக்கும் அறையில்
அனேகமாக யாராவது ஒருவர்
தனியே விடப்படுகிறார்

இருவர் ஆணாய்
ஒருவர் பெண்ணாய்
ஒருவர் ஆணாய்
இருவர் பெண்ணாய்
இருந்துவிட்டால்
இந்தக் கொடுமைகளுக்கு
முடிவே இல்லை

அந்த ஒருவர்
மயங்கி விழுகிறார்

தேம்பி அழுகிறார்

பெரிய தத்துவத்தையோ
கவிதையையோ
பேசமுற்படுகிறார்

கதவை திறந்து கொண்டு
வெளியேறுகிறார்

என்னன்னவோ
செய்ய வேண்டியிருக்கிறது
இந்த உலகில்
இன்னொருவரின்
கவனத்தை ஈர்க்க

நானாக இருந்தால்
ஒருவெடிகுண்டை
பற்றவைப்பது பற்றி யோசிப்பேன்

-மனுஷ்யபுத்திரன்

இது போன்ற தருணங்களில் அடிக்கடி சிக்கிக்கொள்வதாலோ என்னவோ இந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.இறுதி வரி அழகாக அதேசமயம் மன அழுத்தத்தின் உச்சத்தை உணர்த்துவதாக இருக்கிறது.மனுஷ்யபுத்திரனின் "என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" என்ற கவிதைத் தொகுப்பில் "காடுகளும் வழித்துணைகளும்" என்ற நீள் கவிதையின் கீழ் வருகிறது இப்பகுதி.

Sunday, November 19, 2006

The Departed - விமர்ஜனம்

படம் வெளியாகி மூன்று வாரங்கள் கழித்து சாவகாசமாக ஒரு நாள் (காலை)11மணிக் காட்சிக்கு போனபோது "House full" போர்டு போட்டுவிட்டிருந்தார்கள்."அட நல்லபடமா இருக்குமோ?" என்று முயற்சித்ததில் இரவு 11 மணிக்காட்சிக்கு டிக்கட் கிடைத்தது.புனேவில் குளிர் தொடங்கிவிட்டபடியால் சுவெட்டர்,பனிக்குல்லாய் சகிதம் போய் அமர்ந்தோம்.படம் மொத்தம் 8 ரீல் என்று போட்டார்கள்.ஆங்கிலப்படம் சின்னபடமாக இருக்குமென்பது தெரியும்,அதற்காக இவ்வளவு சின்னபடமா என்று கண்ணைக்கசகிவிட்டுப் பார்த்ததில் 18 ரீல் என்பது தெளிவாகத்தெரிந்தது!


ஆரம்பக் காட்சிகளில் ஜாக் நிகல்சன் "I don't wanna be a product of my environment, I want my environment to be a product of me"என்று கூறிப் புன்னகைக்கும்போதே தெரிந்துவிடுகிறது நின்று விளையாடப் போகிறார்கள் என்பது.இரவு தூக்கத்தைத் தியாகம் செய்து படம் பார்த்ததை, படம் நியாயப்படுத்தியது.

கதைக்களம்(spoiler warning)
தெற்கு பாஸ்டனில் உலாவரும் மாபியா தலைவன் பிராங்க் காஸ்டெல்லோ(ஜாக் நிக்கல்சன்).அவரது கண்காணிப்பில் வளரும் காலின் சல்லிவன்(மாட் டாமன்),வளர்ந்து போலீஸில் சேருகிறான்.சேர்ந்து காஸ்டெல்லோவின் உளவாளியாக செயல் படுகிறான்.

மோசமான குடும்ப பின்னணியிலிருந்து வளர்ந்து,கடின உழைப்பால் போலீஸில் சேரும் பில்லி காஸ்டிகன்(டி-கேப்ரியோ) காஸ்டெல்லோவின் கூட்டத்திற்கு அனுப்பப்படுகிறான் போலீஸின் ரகசிய உளவாளியாக செயல்பட.

ஒருகட்டத்தில் இரு குழுக்களும் தங்களுக்குள் ஒரு ஒற்றன் இருப்பதை உணர்கிறார்கள்.டிகேப்ரியோ,மாட் டாமன் இருவருக்குமே எதிர் உளவாளியைக் கண்டுபிடிப்பது வாழ்வா சாவா போராட்டம்.இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள்.இப்படியாகச் செல்கிறது கதை.
----------------------------------------------------------------
Frank costello:When I was your age they used to say you could become cops or criminals. What I'm saying to you is this... When your facing a loaded gun, what's the difference?
--------------------------------------------------------------------------------------
ஒரு மசாலபடம் எடுப்பதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தும்,கண்னியமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் Martin Scorsese .இது "Infernal affairs"என்ற ஹாங்காங் படத்தின் தழுவல் தான் என்றாலும்,கட்சிகுக் காட்சி remake பண்ணாமல் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம்.

படத்தின் மிகப்பெரிய பலம் "நடிகர்கள்".நடிகர்கள் தேர்வு சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.ஜாக் நிகல்சன்,டிகேப்ரியோ,மாட் டாமன்,மார்க் வில்பர்க் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் கனகச்சிதமாகப் பொருந்துகிறார்கள்.ஜாக் நிகல்சன் படம் முழுவதும் அனாயாசமாக வில்லத்தனம் கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.தன் மன உளைச்சலை வெளிப்படுத்தும் இடங்களிலும்,ஜாக் நிகல்சனுடனான உரையாடல்களின் போதும் டி-கேப்ரியோவின் நடிப்பு Class !

படத்தின் மற்றொரு பலம் 'வசனங்கள்'.Frank costello:When I was your age they used to say you could become cops or criminals. What I'm saying to you is this... When your facing a loaded gun, what's the difference? போன்ற வசனங்கள் கைத்தட்டலைப் பெறுகின்றன.ஆங்கிலப்படம் பார்க்கையில் எல்லாரும் சிரிக்கும்போது சேர்ந்து சிரிக்கும் எனக்கே இப்படத்தின் வசனங்கள் புரிந்தன :)


சில குறைகள்:

*தமிழ்படங்கள் நிறைய பார்த்து பழக்கப்பட்டதாலோ என்னவோ படத்தின் முடிவு அவ்வளவு உடன்பாடுடையதாக இல்லை.படத்தின் முடிவில் Director ,லைட் பாய் தவிர மற்றெல்லாரையும் சுட்டு வீழ்த்திவிடுகிறார்கள்.
*படத்தில் நான்கெழுத்துக் கெட்டவார்த்தை வரும் நேரத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், படம் ஒன்றரை மணிநேரமாகச் சுருங்கிவிடும்.
* படத்தின் கதாநாயகி கதாப்பாத்திரம் சற்று முரண்பாடுடையதாக இருக்கிறது."Infernal Affairs" படத்தில் இரண்டு பெண்கள் செய்த தனித்தனி கேரக்டர்களை இதில் ஒரே பெண்செய்வது போலக் காட்டியிருப்பது ,திரையில் சரியாக வரவில்லை.

இந்தமுறை ஆஸ்கர் ரேஸில் நடிப்பு உட்பட சிலபிரிவுகளில் "The Departed" விருதுகளை அள்ளப்போவது உறுதி.

Monday, October 02, 2006

யாமறிந்த மொழிகளிலே....

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள்கடியும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னே ரிலாத தமிழ்


மென்பொருள் துறையில் தென்னிந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது தெரிந்ததே.குறிப்பாக தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் எண்ணிக்கை அதிகம்.இதில் தமிழர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும்
தெலுங்குதேசத்தவரின் எண்ணிக்கை சற்றே கூடுதல்
எனலாம்.குறைந்தபட்ஷம் ஒரு சிறு குழுவிற்கு(Team) ஒருவராவது இருப்பர்(இவர்களில் பெர்ம்பாலானவர்களின் வாழ்க்கை லட்சியம் அமெரிக்கா சென்று குடியேறுவதாகத்தான் இருக்கும்.நம்மவர்களுக்கும் இந்த ஆசை உண்டென்றாலும் ,தெலுங்கர்கள் இவ்விஷயத்தில் மிகத்தீவிரமாக இருப்பார்கள்).

உடன் பணிபுரியும் தெலுங்கு மக்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது,பேச்சு மொழியை நோக்கிச்சென்றது.தமிழ் தெலுங்கை விடத்தொன்மையானது என்ற என்வாதத்தை அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை. ரங்கராஜுலு,வெஙட்ராமுலு என்று ஏதேதோ அறிஞர்களின் பெயர்களைச்சொல்லி,அவர்களெல்லாம் தெலுங்குதான் தென்னிந்திய மொழிகளில் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளதாகச் சொன்னார்கள்.பாதிவிவாதத்தில் என் விஷயஞானமின்மை காரணமாக நிராயுதபாணியாக நிறுத்தப்பட்டேன்.அவர்கள் சொல்வது தவறு என எனக்கு தெரிந்திருந்தும்,அதனை நிரூபிக்கத்தேவையான சரித்திரசான்றுகள் என்னிடமில்லை.சரி,இணையத்தில் ஏதாவது கிடைக்குமா என்று கூக்ளியதில் George L. Hart என்பவர் எழுதிய அருமையான ஒரு கட்டுரை கிடைத்தது.கட்டுரை கூட இல்லை,கடிதம்.தமிழை செம்மொழியாக அறிவிக்கப் பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அவர் எழுதிய கடிதம் அது.தமிழைப்பற்றி எழுதப்பட்ட சிறந்த கட்டுரைகளில் ஒன்றாகக்கொள்ளலாம் இதனை.ஒரு வார்த்தைகூட ,கூடுதலாகவோ,குறைவாகவோ இல்லாமல் நேர்த்தியான பாரதியின் கவிதை போல இருக்கிறது இக்கடிதம்.இலக்கிய நடையில் சொல்லவேண்டுமென்றால் "நறுக்குத் தெரித்தாற்போல்" இருக்கிறது ,பேச்சு நடையில் சொல்லவேண்டுமென்றால் "நெத்தியடி".

தமிழின் தொன்மையை சான்றுடன் விளக்கும் இக்கடிதம் அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று.கட்டுரையின் இறுதியில் Hart இவ்வாறு குறிப்பிடுகிறார்"தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி கட்டுரை எழுத வேண்டியுள்ளது வினோதமாக உள்ளது.இது எதனைப் போன்றுள்ளது என்றால் இந்தியாவை உலகின் சிறந்த நாடுகளில் ஒன்று என்றோ ,ஹிந்து மதத்தை உலகின் சிறந்த மதங்களில் ஒன்று என்றோ அறிவிக்கக் கோருவதைப்போல உள்ளது " .

அந்தக் கடிதத்தை உங்கள் பார்வைக்குத்தருகிறேன்.அதற்குமுன் Hart பற்றி ஒரு சிறுகுறிப்பு.

Hart கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.சம்ஸ்கிருதம்,லத்தீன்,கிரீக் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளில் மிகுந்த புலைமையுடையவர்.புறநானூறு,கம்பராமாயணம் போன்ற பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்.தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார்.இவரது மனைவியின் பெயர் கெளசல்யா.இவர் இக்கடிதத்தை எழுதிய ஆண்டு 2000.அரசு தமிழை செம்மொழியாக அறிவித்தது 2004-ல்.

அக்கடிதத்தைக் காண Tamil as a Classical Language


George L. Hart

Hart உடனான சந்திப்பு தமிழில் சந்திப்பு 1
சந்திப்பு 2

(பின்குறிப்பு:தமிழறிந்த சான்றோர் பலருக்கு இது பழைய செய்தியாக இருக்கும் :)) )

Sunday, September 17, 2006

லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு?



இந்த ஓவியத்தை நன்றாகப் பாருங்கள்.ரவிவர்மாவின் ஓவியத்தைவிட சிறந்தது இது.பிகாஸோவின் ஓவியத்தைவிட விலைஉயர்ந்தது இது.இந்த ஓவியத்தை வரைந்த,இரண்டாம் வகுப்பு படிக்கும் மீனாட்சியை பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?ஒருவேளை இவளது அன்னையைப் பார்த்திருக்கலாம்.இரவு நேரங்களில் புனாவின்(Poona) ஏதாவதொரு தெருமுனையில் நின்றுகொண்டிருப்பாள்.பொருந்தாத உதட்டுசாயதுடனும்,அதீத ஒப்பனையுடனும் நின்றிருக்கும் இவள்,நீங்கள் கடந்துபோகையில் உங்களைப் பார்த்து கண்சிமிட்டக் கூடும்.ஆம்,இந்தக் குழந்தையின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி.

அண்மையில்,'ஏகலைவ்ய நியாசா' என்ற தொண்டுஅமைப்பு (Pune)பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டியொன்றை நடத்தியது.அதில் அக்குழந்தைகள் வரைந்த ஓவியங்களை நான் பணிபுரியும் நிறுவனத்தில் விற்பனைக்காக வைத்திருந்தார்கள்.அக்கண்காட்சியில் நான் வாங்கிய ஓவியம் இது.

இந்தியாவின் மூன்றாவது பெரிய சிவப்பு விளக்குப்பகுதி புனாவில் உள்ளது."புத்வார் பேட்" என்றழைக்கப்படும் இப்பகுதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள்.மீனாட்சி போன்று இங்கு ஏராளமான குழந்தைகள் இருக்கின்றார்கள்.உலகி மிகக்கொடியது 'இளமையில் வறுமை' என்றாள் அவ்வை.அதனினும் கொடிது இங்குள்ள குழந்தைகளின் நிலைமை.மனித வாழ்க்கைக்கு சற்றும் அருகதையற்ற இப்பகுதிகளில் வசித்துவரும் இந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு சமூகம் கொடுத்திருக்கும் அடையாளம் கொடுமையானது.
தங்கள் பெற்றோரைப் பற்றிய இக்குழந்தைகளின் புரிதல் என்னவாக இருக்கும் என்பது வருத்ததிற்குரிய கேள்வி.பொதுவாக இங்கு கணவன் - மனைவி உறவுசம்பிரதாயங்கள் அவ்வளவாகப் பின்பற்றப் படுவதில்லையாம்.எனவே,இவர்களில் எத்தனைபேரின் குழந்தைகளுக்கு தந்தை என்ற உறவு கிடைத்திருக்கிறது என்பது தெரியவில்லை.

இக்குழந்தைகளின் நல்வாழ்வுக்காக பல சேவை நிறுவனக்கள் போராடி வருகின்றன.இப்பகுதியில் இவர்களுக்காக நடத்தப்ப்டும் பிரத்தியேகப் பள்ளி,மற்றும் அரசு பள்ளிகளைத்தவிர மற்ற பள்ளிகளில் இக்குழந்தைகளுக்கு இடம் கிடைப்பது கடினமான காரியமாக உள்ளது என்று சேவைஅமைப்பைச்சேர்ந்த ஒரு நண்பர் குறிப்பிட்டார்.இந்த குழந்தைகளுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி,நல்ல கல்வியை இவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதாகத்தான் இருக்கும்.மாறாக இவர்களது கல்வி பாதியில் தடைபடுமானால்,இவர்களும் இதே படுகுழியில் விழாதிருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

மீனட்சியின் ஓவியத்தில், நம் பாரதக் கொடி எப்படி பட்டொளி வீசிப்பறக்கிறது பாருங்கள் !

Tuesday, August 29, 2006

புத்தகங்கள்

Tagged by KK

One book that changed my life

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூவினால் எழுதப்பட்ட இருத்தலியல்(Existentialism) பற்றிய "The Stranger"(L'Étranger) என்ற நாவல்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.என் வாழ்க்கையில் என்று சொல்வதைக்காட்டிலும் என் மனப்போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
தனக்கு ஏற்படும் சுகதுக்கங்களை ஒரு வெளிமனிதனாக விலகி நின்று உற்றுநோக்கும் அதன் கதாநாயகனின்(Meursault) மனப்பங்கு என்னை மிகவும் கவர்ந்தது.
அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள இருத்தலியல் பற்றிய கருத்துகள் என்ன்னுள் பல வினாக்களை எழுப்பின.ஆல்பர்ட் காம்யூ, தான் ஒரு எக்ஸிஸ்டன்ஷியலிஸ்ட்டாக அடையாளம் காட்டப்படுவதை விரும்பாவிட்டாலும், எக்ஸிஸ்டன்ஷியலிசம் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு முதலில் பரிந்துரைக்கப்படும் நூல் "L'Étranger"
நிற்க...

இப்படியெல்லாம் எழுத இது போன்ற பெரிய பெரிய புத்தகங்களையெல்லாம் படித்திருக்க வேண்டும்.ஆனால் என் வாசிப்பு குமுதம்,விகடன்..இத்தோடு சரி ஹீ...ஹீ
இதுவரை..அப்படிப்பட்ட வாழ்வை மாற்றக்கூடிய புத்தகங்கள் எதையும் நான் படிக்கவில்லை.

The book you have read more than once

ஜேஜே சில குறிப்புகள் - சுந்திர ராமசாமி
முதல் வாசிப்பில் நிறைய புரியவில்லை என்பதால் மீண்டும் படித்தேன்.இன்னமும் அந்த புத்தகத்தில் எனக்கு புரியாத பகுதிகள் நிறைய உண்டு.சு.ரா வின் பாஷையிலேயே சொல்ல வேண்டும் என்றால்..ஒரு வேட்டை நாயின் தீவிரத்துடன் அவரது எழுத்துக்களை பிந்தொடர்ந்து...பாதிவழியில் மூச்சிரைத்து நின்று விட்டேன்.

துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
வாழ்வின் எதார்த்தங்களையும்,சிக்கல்களையும்,அழகினையும் தன் பயணத்தினூடாக விளக்க்கியிருப்பார்.உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தை எத்தனைமுறைவேண்டுமானாலும் படிக்கலாம்.

One book you would want on dessert island

ஆதவனின் சிறுகதைத்தொகுப்பு
(or)
அசோகமித்ரனின் கட்டுரைகள்(தொகுப்பு)
(or)
இரண்டும் :)

One book that made you laugh

ஆதலினால் காதல் செய்வீர் - சுஜாதா

one book that made me cry

இதுவரை அப்படி ஒரு புத்தகத்தைப் படிக்கவில்லை(மோசமாக எழுதப்பட்டிருக்கும் சில புத்தகங்களைப் படிக்கும்போது அழுகைவருவது வேறுவிஷயம்)

One book you wish you had written

சுஜாதாவின் படைப்புகள் அனைத்தையும்

One book that you wish had never been written

ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா
புரியவில்லை என்பதும் ஒரு காரணம்....
(சு.ரா: புரியாத எழுத்துகளில் இரண்டுவகை உண்டு.முதலாவது ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியது.பின்னது அதன் எதிமறை)

சாருவின் இந்த புத்தகம் இரண்டாவது வகை என நினைக்கிறேன்

One book you are currently reading

ஒன்றல்ல மூன்று புத்தகங்கள்
1) கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதாசுஜாதாவின் கட்டுரைகளைத் தொகுத்திருப்பது தேசிகன்
2)என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - மனுஷ்ய புத்திரன்
Sample கவிதை:

பாபருக்கு
வேண்டும் மசூதி

ராமருக்கு
வேண்டும் கோவில்

ஜனங்களுக்கு
வேண்டும் சுகாதாரமான
கழிப்பறைகள்
3)Bhagavat Gita -A rational enquiry
Prof Veerabathrappa

One book you have been meaning to read
லா.சா.ரா , பிரமிள், மெளனி,வண்ண நிலவன்,வண்ணதாசன்,காப்கா,தஸ்தோவெஸ்கி,எரிக்கா ஜங்,ஜேம்ஸ் தர் பர்,புதுமைப் பித்தன்...
இவர்களின் புத்தகங்களில் தலைக்கு ஒன்றாவது படித்துவிட வேண்டும்.

Tagging anusuya to write 'book post'

Friday, August 25, 2006

வேட்டையாடு விளையாடு Review(India Glitz)


There is a universal charm to a policeman in search of clues to crack a series of murders. Its attraction is almost primordial. And when you have somebody like Kamal who can get into the flesh of any character and Gautham Menon, who knows how to set up the right ambient mood and field, what you have is two and half hours of sustained and quality entertainment. Vettaiyaadu Vilaiyaadu is proof for that.

It is technically superior ----- the edges are pared down to give that steely and glassy Yankee feel. The lighting is moody and menacing in turns, just the backdrop for an urban thriller. The editing is cutting edge ---where events coalesce in easy and effective links. The way Gautham explores New York is something that even Woody Allen would have approved of.
The broad plot of a policeman trying to crack a case ---- a variation of a cat and mouse theme ---- gets the right backing from Gautham, who goes beyond Kaakha Kaakha where he showed what happens when a cop uses his brawn and pin-pointed aggression. Here he lets the man use his mental craft.

Gautham sets the mood right from the start as he introduces DCP Raghavan (Kamal Haasan) in typical style. Raghavan sets off on the trail of the killers of Rani, the daughter of Arogya Raj (Praksh Raj). Raghavan and Arogya Raj go back long way together. They share a unique relationship.

While Raghavan is stunned by the gut-wrenching morbidity in Rani’s killing, Arogya Raj and his family set off to New York to escape from the memories of their daughter. But there he is hacked and bumped off in the most violent of manners.
Raghavan is off to crack this perplexing mystery. In NY, he runs into Aradhana (Jyothika). Raghavan is a widower (his wife Kamalini is taken out by thugs) while Aradhana is trying to get out of a failed marriage. The two make a pair. And Raghavan gets down catching the killers with the help of American police.

It is slick and shiny all through with all the pauses and poise that such a script requires. Kamal’s acting need not be elaborated. He brings a sharp idiom to the role of a cop who has to hunt to some faceless killers.

Kamal’s strength is that he can shine in even lonely roles (even when he can’t feed off from somebody else’s intensity). Kamal understates and underplays the cop character with remarkable discernment. The narrative simply unfolds from him. Jyothika too is quiet and restrained. Kamalini is cute and plays a simple role with elegance. Prakash Raj is as ever bankable. This man never ceases to amaze us with his variety. Balaji as the villain fits the bill.
Harris Jeyaraj and Gautham share a unique rapport. Harris songs not only rock but the re-recording too is simply superb.

The other hero of the film is Ravi Varman, the camera man. He has given the entire flavor and feels to the movie. In a lesser craftsman’s hand, the film would not have got this polish and finesse. His visual metaphors are apt and the lighting is amazing. The angles too are novel and keep you interested all through.

Gautham knows how to let the story flow in trendy narratives. He has the feel for the medium as well he knows how to wrest good performances from his team. In the event, Vettaiyaadu Vilaiyaadu is a worthy successor to his Kaakha Kaakha.

Thanks: Indiaglitz.com

Thursday, August 17, 2006

ஐபெல் டவர்(Eiffel Tower) -விற்பனைக்கு!




"உண்மை பலநேரங்களில் கற்பனையைவிட சுவாரஸியமானது"

ஐபெல் டவரை(Eiffel Tower) ஒருவர் இரண்டுமுறை விற்றிருக்கிறார் என்று படித்தபோது எனக்கும் இப்படித்தான் தோன்றியது. LIC கட்டிடத்தை விற்பதாக திரைப்படங்களில் நகைச்சுவைக்காட்சிகள் வந்தபோது கூட இந்த கோணத்தில் சிந்திததில்லை."King of all con men " என்று அழைக்கப்படும் Victor Lustig என்பவர் தான் அந்த மகாஎத்தன்.

1890-ல் செக்கோஸ்லுவாக்கியாவில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர் Victor Lustig .சிறுவயதிலேயெ பல மொழிகளைப் பேசக் கற்றுக்கொண்ட Lustig சக மனிதர்களின் பழக்கவழக்கங்களையும்,பல்வீனங்களையும் எளிதில் கிரகிக்கும் திறன் கொண்டிருந்தார்.தனது 20வது வயதில் ஒரு சிறந்த கான் ஆர்டிஸ்டாக(Con-Artist) மலர்ந்த அவர் தன் 30வது வயதில் போலீஸால் பெரிதும் தேடப்படுபவராக(Most wanted) தேர்ந்திருந்தார்(!).

சில்லறை பித்தலாட்டங்களில் போரடித்துப்போன Lustig புதியதிட்டம் ஒன்றை தீட்டினார்.அத்ற்காக அவ்ர் கண்டறிந்ததுதான் Money Printing Machine.அந்த எந்திரத்தில் 100$-ஐ வைத்தால் 6 மணி நேரத்தில் மற்றுமொரு புதிய 100$ நோட்டினை(வேறு சீரியல் நம்பர்களுடன்)வெளித்தள்ளும்.இதனை 50,000$ வரை விற்றிருக்கிறார்.விற்ற 12 மணிநேரத்திற்குப்பிறகு அந்த டுபாகூர் எந்திரம் தன் வேலையைக் காட்டத்துவங்கிற்று.அதாவது வெறும் வெள்ளைத்தாளை கக்கத்த் தொடங்கியது.வாங்கியவர்கள் Victor Lustig-ன் கடையை முற்றுகை இடத்துவங்கினார்கள்.அச்சமயத்தில் அவர் வேறொரு தேசத்தில் பறந்து கொண்டிருந்தார்.

1925-ல், முதலாம் உலக யுத்ததிற்கு பிறகு பிரான்சில் தொழிற்புரட்சி ஏற்பத்துவங்கியிருந்த காலமது.அப்போது அங்கு தங்கியிருந்த Lustig-ன் கவனத்தை கவர்ந்தது,அன்றைய நாளிதளில் வெளியாகியிருந்த செய்தி ஒன்று.அதன் தலைப்பு இது தான்

"Eiffel Tower in drastic need of renovation"
ஐபெல் டவரை பராமரிப்பதில் அரசிற்குண்டான கஷ்டங்களையும்,அது முழுமையாக புதுப்பிக்கபடவேண்டியதன் அவசியத்தையும் அக்கட்டுரை அலசியிருந்தது.டவரை அகற்றிவிட்டால் கூட பரவாயில்லை என்பதுபோன்ற செய்திகளை வெளியிட்டிருந்தது அப்பத்திரிக்கை.இதனைப் படிக்க படிக்க Lustig-ன் மனதில் ஒரு திட்டம் உருவானது.ஒருவேளை அரசு ஐபெல் டவரை விற்க நேர்ந்தால்!

Lustig உடனடியாக செயலில் இறங்கினார்.ஒரு அரசு அதிகாரின் உதவியுடன் அரசு முத்திரை இடப்பட்ட தாள்களைப்பெற்றார்.அதனைக் கொண்டு பிரான்சின் முன்னணி இரும்பு வியாபாரிகள் சிலருக்கு ரகசியக்கூட்டம் ஒன்றிற்கான அழைப்பை விடுத்தார்."Deputy director General of the Ministry of Mail and Telegraps" என்று ஒரு பதவியை தனக்குத்தானே அளித்துக்கொண்டார்.அவரது நண்பர் டாப்பர் டான் தான் அவரது Personal secretary.இந்த சந்திப்பினை பிரான்சின் மிகப்பெரிய ஹோட்டல்களில் ஒன்றான Crillonல் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த ரகசிய சந்திப்பில்(!) ஐபெல் டவரினால் அரசிற்கு ஏற்படும் சங்கடங்களையும்,அரசு அதனை விற்க முன்வந்திருப்பதாகவும் சாதுர்யமாகப் பேசினார்.பெயர் பெற்ற,நேர்மையான வியாபாரிகளை மட்டுமே அரசு பேரத்திற்கு அழைத்திருப்பதாகக் கூறினார்.ஐபெல் டவரை விற்க மக்கள் கடும்எதிர்ப்பு தெரிவிப்பார்களென்பதால்,இந்த ஒப்பந்தமும்,வாங்குபவர் பற்றிய விபரங்களும் ரகசியம்மாக வைத்திருக்கப்படும் என்று உறுதி கூறினார்.இதில் Mr.Poisson என்பவர் ஆர்வமாக இருப்பதை உணர்ந்து கொண்ட Lustig,அவரைத்தனியாக அழைத்து ஒப்பந்தத்தை பேசி முடித்தார்.ஐபெல் டவரை ஒரு பெரிய தொகைக்கு விற்றார்.இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்ன தெரியுமா?தான் ஒரு அரசு அதிகாரி என்பதால் தன்க்கு சம்பளம் குறைவு என்றும் ,இந்த ஒப்பந்ததை அவர் பெயரில் முடிக்க தனக்கு லஞ்சம் வெண்டும் என்று ஒரு பெரிய தொகையும் Poisson-னிடமிருந்து பெற்று கொண்டு விட்டார்.பணத்தை வாங்கிக்கொண்டு வெளி நாட்டுக்குப் பறந்தவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.பணத்தை ஏமந்தவர் போலீஸில் புகார் கொடுக்கவில்லை.தன் மானம் போய்விடும் என்று கருதி பேசாமல் இருந்து விட்டார்."அட இது நல்லயிருக்கே" என்று நினைத்தவர் மீண்டும் ஒருமுறை இதேபோன்று மற்றொரு நபரிடம் விற்றிருக்கிறார்.ஆனால் இம்முறை பணத்தை இழந்தவர் போலீஸில் புகார் செய்துவிட வேறு வழியில்லாம அமெரிக்காவிற்கு பறந்து விட்டார்.அதன் பிறகு அவர் பிரான்சுக்குத்திரும்பவே இல்லை.

அடுத்து Victor Lustig தன் கைவரிசையைக் காட்டியது பொது மக்களிடம் அல்ல,மாறாக அக்காலகட்டத்தில் அமெரிக்காவில் மிகப்பெரிய கிரிமினல்லாக இருந்த Al Capone னிடம்.அவரிடம் தனக்கு 500,000டாலர்களைத்தந்தால் ஒரு வணிகத்தின் மூலம் அறுபதே நாட்களில் இருமடங்காக்கித்தருவதாகக் கூறியிருக்கிறார்.இதற்கு ஒத்துக்கொண்ட Capone..ஏமாற்ற நினைத்தால் என்ன நடக்கும் என்பதையும் எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.பணத்தை ஒரு வங்கியில் பத்திரமாக பொட்டுவிட்டு Lustig ஹாயாக ஊர்சுர்றியிருக்கிறார்.60 நாட்களுக்குப்பின் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு Capone-ஐ சந்தித்திருக்கிறார்.தன் முயற்சியில் தோல்வி அடைந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.ஆத்திரமடைந்த capone க்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறார்.ஆம் அவரது 50,000 டாலர்களையும் திருப்பித் தந்திருக்கியிருக்கிறார்.இதனால் ஆசரியமடைந்த capone - இவரது நேர்மையை பாராட்டி 1000 டாலர்களை இவருக்கு பரிசளித்திருக்கிறார்.அவருக்கு வேண்டியதும் அதுதானே! தான் ஏமாற்றப்பட்டதைக்கூட உணராத Capone - ஐ பார்த்து புன்னகைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் Lustig.மனித உணர்வுகளைப்படிக்கத்தெரிந்த அவரது திறமைக்குக் கிடைத்த பரிசு அது.

அதன் பின் பல ஆண்டுகளுக்குப்பிறகு 1935 -ல் போலி டாலர்களைக் கைமாற்றும் போது போலீஸில் பிடிபட்ட Lustig, 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.தனது இறுதி காலத்தை 'அல்கார்ட்ஸ்' சிறையில் கழித்தார்.அங்கு தனது சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டு,பின் போலீஸாரால் வேறு ஒரு அறைக்கு அனுப்பப்பட்டார்.அந்த சககைதியின் பெயர் Al Capone !.

1947-ல் நிமோனியா காய்ச்சல் கண்டு சிறையிலேயே இறந்து போனார் Lustig.அவரது இறப்பு சான்றிதழ் படிவத்தை நிரப்பிக்கொண்டுவந்த அலுவலர் OCCUPATION என்ற கட்டத்தின் அருகில் சற்று நிறுத்தி,யோசித்தார்..பின்பு SALES MAN எனநிரப்பினார்.

"There's a suker born every minute"
-P.T.Barnum

Thursday, August 03, 2006

Lajjo-மணிரத்னத்தின் அடுத்த படம்!!!


நல்ல சினிமாமீது நம்பிக்கை உள்ள தமிழ் ரசிகர்களின் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி மணிரத்னம் தனது அடுத்த ஹிந்தி படத்தை துவக்கி உள்ளார்.

பாபி பேடியுடன் மணிரத்னம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசை நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்,ஒளிப்பதிவு ப்.சி.ஸ்ரீராம்.நல்ல கலைஞர்களெல்லாம் இப்படி ஹிந்திக்குப் போய்விட்டால்...பேரரசு,எஸ்.ஜே.சூர்யா..இவர்களின் படங்கள் 100 நாள் ஓடுவதில் வியப்பேதும் இல்லை.
மணிரத்னம் ஏன் இப்படி ஹிந்திக்கு ஓடுகிறார் என்பது புரியவில்லை?அங்குதான் நிறைய காசு தருகிறார்கள் என்பதாலா?இல்லை நல்ல ரசிகர்கள் அங்குதான் இருக்கிறார்களா?அதிகமான மக்களை சென்றடைய ஹிந்திதான் சரியான ஊடகம் என்றாலும்,தமிழில் எடுத்து பின் டப் செயப்பட்ட படங்கள் தான் இந்திய அளவில் பேசப்பட்டன(ரோஜா,பம்பாய்).தில் ஸே,யுவா போன்ற படங்கள் திரையிடப்பட்ட ஒரேவாரத்தில் கால் நீட்டி குப்புறப் படுத்துக்கொண்டுவிட்டன..

"குரு"படம் அம்பானி பற்றிய கதை என்பதால் ஹிந்தியில் எடுத்தால் தான் பொருத்தமாக இருக்கும்..OK.ஆமிர்கானையும்,கரீனா கபூரையும் வைத்து ராஜஸ்தான் based lovestory எடுக்கவாண்டியதன் அவசியம் என்னவோ?(கேட்டா படைப்பு சுதந்திரம்னு சொல்லுவாங்க)

2008-ல் 'The Mahabarat Trilogy' என்ற மிகப்பெரிய படைப்பை துவங்க இருக்கிறார்.அதயாவது ஆங்கிலத்தில் எடுப்பார் என்று நம்புவோம்.
Lajjo-shy girl

Tuesday, July 25, 2006

நடிகை ஜலஜாவின் நாய்க்குட்டி......

நடிகை பிரமீளாவுக்கு நகத்தைக் கடிக்கும் பழக்கம் உண்டு என்று ஒரு பத்திரிக்கை கட்டத்துக்குள் பதிப்பிக்கிறது.பிரமீளாவுக்கு நகம்கடிக்கும் பழக்கம் இருந்தால் என்ன?வேறு எவளுக்கோ தொடையில் மச்சம் இருந்தால் நமக்கு என்ன என்று ஒருவரும் கேட்பதில்லை.கேள்வி கேட்காமல் இந்த Trivia அனைத்தையும் உட்கார்ந்து கொண்டு படித்துக்கொண்டிருக்கிறோம்.இதைவிட அதிகமாக ஒரு ஜனக்கூட்டத்தை எவனும் அவமானப்படுத்த முடியாது என எண்ணுகிறேன்.

- சுஜாதா,கணையாளி,1973 ஆகஸ்ட்




* ரீமசென் ஐந்து கிலோ எடையை குறைத்திருக்கிறார்

* அஸினுக்கு பிடித்தமான உணவு பொறித்த ஆற்று மீன் தான்

* படப்பிடிப்பின் போது கிடைக்கும் இடைவேளையில் நடிகை சதா அவரது தந்தையின் மடியில் தலை வைத்துத் தூங்குகிறார்

-குமுதம்,2006,ஜுலை



இந்த 33 வருடங்களில், பதிரிக்கை தொழில்நுட்பத்தில் அபரிமிதமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்.ஆனால் அதன் உள்ளடக்கத்தில் எவ்வித முன்னேற்றமும்
இல்லை.பின்னோக்கிப்போய்க்கொண்டிருக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.குமுதம் போன்று விற்பனையில் முன்னணியில் இருக்கும் வார இதழ்களின் 90% பக்கங்களை ஆக்கிரமிப்பது நடிகைகளின் தொப்புள்களும் அவர்களைப்பற்றிய செய்தியும் தான்.சினிமா செய்திகளே வெளியிடக்கூடாது என்று சொல்லவில்லை.ஏனெனில் தமிழகம் போன்று சினிமாவுடன் மக்கள்பிணைப்பு அதிகமாக உள்ள மாநிலத்தில் இது சாத்தியமற்ற ஒன்று.மேலும் உ.வெ.சாமிநாதைய்யரின் படத்தையோ,அருந்ததிராயின் படத்தையோ அட்டைப்படமாகப் போட்டால் நானே வாங்க மாட்டேன்.ஆனால் எதற்கும் அளவு, வரைமுறை வேண்டாமா?
இந்தவார குமுதம் பத்திரிக்கையின் உள்ளடக்கம் என்ன தெரியுமா?


*நடிகை நமீதா ஒரு படப்பிடிபில் நடனக்காட்சியில் எவ்வாறு குத்தாட்டம் போட்டார் என்பதை விவரிக்கும் கட்டுரை.

*ரீமாசென் நடிகர் விஷாலைக் காதலிக்கிறாரா? என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்கு விடையைக் கண்டறிய அவருடன் ஒரு பேட்டி.

*நடிகர் விஜயின் அடுத்தபடத்தின் கதை என்னவாயிருக்கும் என்ற நாட்டின் தலையாய பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஒரு கட்டுரை.அப்படத்தில் வரும் பன்ச் டயலாக் தான் கட்டுரையின் தலைப்பு."நான் முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்".(உன் பேச்சை நீயே கேக்க மாட்டேன்னா...நீ என்ன லூஸா??)

*டி.வி நடிகர் ஒருவர் சண்டை போட்டுப்பிரிந்த தன் மனைவியுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சியான கதை.

*நான்கு இளம் பெண்கள் நடிகர் சூர்யாவை 108வது தடவையாகப் பேட்டிகண்டு,109தடவையாக "நீங்க எப்டி இவ்ளவு handsome-ஆ இர்க்கீங்க?" என்ற அற்புதமான கேள்வியைக்கேட்கும் பேட்டி.

*நடிகை மீனவின் பேட்டி. இது தவிர லைட்ஸ் ஆன்,சினிமா விமர்சனம்,சினிமாத்துணுக்குகள்.

கடைசீ பக்கத்துக்கு முந்தின பக்கத்தில் மும்பை குண்டு வெடிப்பு பற்றிய சிறியகட்டுரை.இதில் காமெடியே தலையங்கம் தான்.புத்தகம் முழுவதும் இப்படிப்பட்ட செய்திகளை நிறைத்துக்கொண்டு, நாட்டில் அரசியல் வாதிகள் எப்படி நாட்டுப்பற்றுடன் செயல் படவேண்டும் என்று எழுதுகிறார்கள்.இதை எழுத இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை.

2039ஆம் வருடம் ஜூலை இதழில் கீழ் கண்டது போன்ற செய்தி வெளியானால்,முகத்தில் எவ்வித ஆச்சரிய ரேகையும் தோன்றாமல் படித்து முடிப்போமாக!

"நடிகை ஜலஜாவின் நாய்க்குட்டி இரண்டு வாரமாக மஞ்சள் நிறத்தில் மூச்சா போவதால், நடிகை மிகவும் கவலையாக உள்ளார்"


Sunday, July 02, 2006

6பதிவு

என்னை ஆறு விளையாட்டுக்கு டேகிய(taggia) அனுசுயா வுக்கு dankx(அப்பாடா எப்டியோ ஒரு பதிவு ஒப்பேத்தியாச்சு).எனக்கு பிடித்த ஆறு பிரபலங்களைப்பற்றி இந்தப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

(1)சுப்பிரமணிய பாரதி



தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
என இறுமாப்புடன் கேட்டதோடன்றி காலத்தின் பக்கங்களில் தன் பெயரை அழியாஎழுத்துக்களால் எழுதியும் சென்றவன்."எமக்குத்தொழில் கவிதை" எனசொன்னாலும் தன் வாழ்க்கையையே கவிதை போல வாழ்ந்தவன்.அல்பாயுசுக்கும் மேதைமைக்குமான தொடர்பு இவன் விஷயத்தில் மீண்டும் ஒருமுரை நிரூபணமானது.வாழ்ந்தகாலதில் சரியான முறையில் அங்கீகரிக்காமல் இறந்தபின் விழா எடுத்துக்கொண்டாடும் தமிழர்களை (மேலுலகத்திலிருந்து) இவன் பார்க்க நேர்ந்தால் ஒரு ஏளனப் புன்னகையை வீசக்கூடும்.


(2)எம்.எஸ்.சுப்புலட்சுமி



"குறை ஒன்றும் இல்லை" என்ற இவரது பாடலுக்கு உருகாதவர் எவரும் இருக்க முடியாது.கர்நாடக சங்கீதத்தை பற்றிய அடிப்படை ஞானம் எதுவும் இல்லதவர்களைக்கூட அந்த இசையை கேட்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.கருணையும் சாந்தமும் ததும்பி வழியும் இவரது உருவம் பெண்மையின் அடையாளம்.

(3)சுஜாதா

"இவர் வீட்டு Laundry பில்லை ப்ரசுரித்தால் கூட படிக்க ஒரு கூட்டம் இருக்கிறது" ஒரு வலைதளத்தில் விளையாட்டாக இப்படி குறிப்பிட்டிருந்தார்கள்.என்னைக்கேட்டால் இது ஒரு மிகைப் படுத்தப்பட்ட உண்மை அவ்வளவே.நவீன கதை சொல்லலின் தந்தை என இவரை சொல்லலாம்.எழுத்துக்கான உயர்ந்த விருதுகளை பெருமைப்படுத்த நினைத்தால்,அவற்றை இவருக்குக் கொடுக்கலாம்.இவர் தமிழ் எழுத்துலக சூப்பர் ஸ்டார்.

(4)எஸ்.பி.பி

"தேன் வந்து பாயுது காதினிலே"இப்டீன்னா என்னன்னு யாராவது கேட்டால் இவர் குரலைக் கேட்க சொல்லலாம்.பாடல்களை உதட்டிலிருந்து அல்லாமல் இதயத்திலிருந்து பாடுபவர்.ஒண்ணுமே இல்லாத சில சப்பையான பாடல்கள் இவர் பாடியதால் சூப்பர் ஹிட்டாகி இருக்கின்றன.பாடல் களுக்கு நடுவில் இரும,சிரிக்க,பேசக்கூட முடியும் என செய்து காடியவர்(அதை இவர் செய்தால் மட்டுமே நன்றாக இருக்கும்).பாடகர் மட்டுமல்ல இசையமைப்பாளர்,சிறந்த நடிகர்.


(5)கமல் ஹாசன்

இவர் செய்த ஒரே தவறு நம்ம நாட்டில் பிறந்தது தான்.

கேள்வி:அன்பே சிவம்,குருதிப்புனல்,மகாநதி இந்த படமெல்லாம் ஏன் நன்றாக ஓடவில்லை?பதில்:திருப்பாச்சி-200நாள்,சிவகாசி-100நாள்,ஆஅ-75 நாள் .....

பொக்ரான் அணுகுண்டு சோதனையினால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியன்.இவரது நற்பணி மன்றங்கள் மூலமாக இதுவரை 5000லிட்டருக்கும் மேல் ரத்ததானம் செய்யப்பட்டுள்ளது.தன் உடல் உறுப்புக்கள் அனைத்தயும் தானமாக தர ஒப்புக்கொண்ட நடிகர்.ஆயிரக்கணக்கில் இதுவரை புத்தகங்களை நூலகங்களுக்கு தானமாக வழங்கியுள்ளார்.உயிருள்ள கண்கள் என்று சொல்லுவார்களே அது இவருக்குப் பொருந்தும்.

(6)இளையராஜா

இவரது சோகப்பாடல்களைக் கேட்டால் அழுகை வரும்.உற்சாக பாடலைக்கேட்டால் குதூகலம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்,குத்துப்பாடலைக்கேட்டால் ஆடத் தோன்றும்,தாலாட்டுப்பாடலைக்கேட்டால் தூக்கம் வரும்...ஆம் இவர் ஒரு மந்திரவாதிதான்.இளையராஜாவால் கூட அவரது இசையின் தாக்கத்தை,வீச்சை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.அந்த அளவுக்கு இரண்டு தலைமுறையினரை பாதித்துவிட்ட இசை இவருடையது.

இவர்களை 6 பதிவுக்கு அழைக்கிறேன்

(1)Gopalan Ramasubbu

(6)mscongeniality

Wednesday, June 28, 2006

வீடு


"வீடு பட சிடி இருக்கா? "

அந்த (வாடகை)சிடி கடைக்காரர் ஏற இறங்கப் பார்த்தார். "இல்லைங்களே அடுத்தவாரம் சென்னை போகும்போது வாங்கிட்டு வறேன்" என்று சொல்லி பெயரைக்குறித்துக்கொண்டார்.
அருகில் இரு பெண்கள் கஜினி சிடி ரிட்டர்ன் செய்வதற்காக நின்று கொண்டிருந்தார்கள்.அவர்கள் என்னை ஒரு Intellectual என்று நினைத்திருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டு ஒரு look விட்டேன்(மேட்டுக்குடி படத்தில் கவுண்டமணி விடுவது போல).ஆனால் ஏதோ ஒரு ஜந்துவைப்பார்ப்பது போல அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.மெதுவாக அங்கிருந்து நடையைக்கட்டினேன் .

இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது,ஒருகாலத்தில் இந்தப்படத்தின் பெயரைக்கேட்டாலே தலைதெறிக்க ஓடுவேன்.நான் 2nd std அல்லது 3rd std படிக்கும் போது இந்தப்படம் வெளியானது என்று நினைக்கிறென்.தேசிய விருது வாங்கி சீக்கிரமே DDக்கு உடைமையாகிவிட்ட படமிது.பிராந்திய மொழிப்பட வரிசையிலும்,ஞாயிரு மாலைப் படவரிசையிலும் மாறி மாறி ஒளிபரப்பி இம்சித்தார்கள். அப்போதெல்லாம் (பெயர் தெரியாத படமாக இருந்தால் )Title போடும்போது உன்னிப்பாக கவனிப்பேன்.சண்டைப்பயிற்சி என்ற slide வந்தால் சரி இது பார்ப்பதற்கு உகந்த படம் என்று முடிவு செய்து விடுவேன்.படதில் இடம்பெற்றிருக்கும் மொத்த சண்டைக்காட்சிகளின் எண்ணிக்கையைக்கொண்டு தான் அதன் தரத்தை நிர்ணயிப்பேன்.அந்த அளவுகோலின் படி 'வீடு' நான் பார்ப்பதற்கு அருகதயற்ற படம்.அதுவும் இந்தப்படத்தில் ஒரு பாடல் காட்சியோ,ஒரு நகைச்சுவைக்காட்சியோ கூடக்கிடையாது.அப்போது இந்தப்படத்தைப்பற்றிய என் கருத்து "இது மிகவும் மெதுவான படம்,எல்லாரும் மெதுவாகப் பேசுவார்கள்,மெதுவாக நடப்பார்கள்,அதுவும் அந்த தாத்தா ரொம்ப slow, அவ்வளவுதான்.
அப்போது மதியம் மாநில மொழிப்படங்களை Alphabetic ordaரில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்,அதாவது மராத்தி,ஒரியா,பஞ்ஜாபி,தமிழ்,தெலுகு என்று.இதில் தமிழும் தெலுங்கும் விதிவிலக்கு.தமிழும் தெலுங்கும் மாறி மாறி முதலில் வரும்.பெரும்பாலும் தமிழ் முதலில் வரும்.அந்தவாரம் என்ன படம் என்று ஞாயிரு காலை அறிவிப்புகளில் தான் தெரிய வரும்.அந்த வரிசயில் வீடு,சந்தியாராகம் இதெல்லாம் ஒளிபரப்பப்பட்டால்,பயங்கரமாகக்கோபம் வரும்.

ஆனால் இப்போது ரசனையெல்லாம் மாறி அல்லது மேம்பட்டு(கண்டுகாதீங்க!) மகேந்திரன்,பாலுமகேந்திரா படமெல்லாம் பார்க்கத்தோன்றுகிறது.1988-ல் வெளியான இந்தப்படம் பாலு மகேந்திராவின் masterpiece என்று வர்ணிக்கப்படுகிறது.படத்தின் கருவும்,காட்சியமைப்புகளும் நிஜத்திற்கு ஆருகில் இருந்தது என்று சொல்வதைக்காடிலும் நிஜமாக இருந்தது என்றே சொல்லாம்.வேலைக்குப்போகும் ஒரு Lower middle class பெண் வீடுகட்ட ஆசைப்பட்டு,அதற்காக அவள் படும் கஷ்ட்டங்களை மிக இயல்பாக விவரிக்கும் படம் .அர்ச்சனா,சொக்கலிங்க பாகவதரின் நடிப்புகள் சிறப்பாகப் பேசப்பட்டன.அர்ச்சனா சிறந்த நடிகைக்கான தெசிய விருதினை இந்தப்படத்தின் மூலம் பெற்றார்.இளையராஜாவின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதுவும் "How to name it" ஆல்பத்திலிருந்து சில பகுதிகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்ற செய்தி இப்படத்தைப்பார்க்கும் ஆவலை மேலும் தூண்டுகிறது.பாலு மகேந்திரா commercial சமரசங்கள் (சில்க் dance)எதுவும் செய்துகொள்ளாமல் எடுத்த படமிது.

மீண்டும் ஒரு தரம் முதல் தடவையாக இந்தப்படத்தைப் பார்க்கப்போகிறேன்!!

Saturday, June 17, 2006

என் கணவர்....






பாரதி, சுஜதா....
இவர்கள் இருவரிடமும் பெரிதாக ஒற்றுமைகள் எதுவும் இல்லை.இருவரும் பிரபலங்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள் என்பதைத்தவிர....இருவரையும் ஒப்பிடவும் முடியாது.ஆனால் இவர்களின் மனைவிகள் இவர்களைப்பற்றி சொன்ன கருத்துக்களில் நிறைய ஒற்றுமை இருக்கிறது.செல்லம்மாள் பாரதிபற்றியும்,திருமதி சுஜாதா சுஜாதா பற்றியும் குறிப்பிட்டவற்றை இங்கு தந்துள்ளேன்.இருவரும் சராசரி வாழ்வுக்க்காக தவித்திருக்கிறார்கள் எனத்தெரிகிறது.பிரபலஙளின் மனைவி என்பது வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு வெண்டுமானால் பன்னீராக இருக்கலாம்...ஆனால் அவர்களுக்கு அது வெந்நீர் தான் போலும்.இதில் செல்லம்மாளின் பாடு ரொம்பவே திண்டாட்டம்.தமது கதைகளில் அல்ட்ரா மாடர்ன் பெண் கதாப்பாத்திரங்களை உலவ விடுபவர் சுஜாதா,அவரின் மனைவி இவ்வளவு கட்டுப்பட்டியானவர் என்பது ஆச்சரியம்.எனக்கும் பாரதிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது,அது கட்டுரையின் இறுதியில்....

பாரதிபற்றி செல்லம்மாள் ..

உலகத்தோடொட்டி வாழ வகையறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேனென்றால் உஙளுக்கு சிரிப்பாகத்தான் இருக்கும்.யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்,ஆனால் கவிஞனின் மனைவியாயிருப்பது கஷ்டம் அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரெமாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.ஏகாந்த்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவருங்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும்,ஆனால் மனைத்தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலுறுக்கமுடியுமா?கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.கடவுளை பக்தி செய்யும் கவிஞன்,காவியம் எழுதும் கவிஞன்,இவர்களை புற உலக தொல்லைகள் சூழ இடமில்லை.எனது கணவரோ கற்பனைக்கவியாக மட்டுமில்லாமல் தேசியக்கவியாகவும் விளங்கியவர்.அதனால் நான் மிகவும் கஷ்ட்டப்பட்டேன்.கவிதை வெள்ளத்தை அணை போட்டு தடுத்தது அடக்குமுறை.குடும்பமே தொல்லைக்குள்ளாகியது.

காலையில் எழுந்ததும் கண்விழித்து,மேநிலைமேல் மேலைசுடர் வானை நோக்கி வீற்றிருப்பார்.ஸ்நானம் ஒவ்வொருநாள் ஒவ்வொரு விதத்தில் அமையும்.சூரியஸ்நானம்தான் அவருக்குப்பிடித்தமானது.வெளியிலே நின்று சூரியனை நிமிர்ந்து பார்ப்பது தான் வெய்யற்க்குளியல்.சூரியகிரகணம் கண்களில் உள்ள மாசுகளை நீக்கும் என்பது அவரது அபிப்பிராயம்.காலை காப்பி தோசை பிரதானமயிருக்கவேண்டும் அவருக்கு.தயிர்,நெய்,புது ஊறுகாய் இவைகளை தோசயின் மேல் பெய்து தின்பார்.அவருக்குப் பிரியமான பொருளை சேகரித்துக்கொடுத்தால்,அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தை புசித்து விடுவார்கள்.எதை வேண்டுமானால் பொருக்கமுடிய்ம் ஆனல் கொடுத்த உணவை தாம் உண்ணாமல் பறவைகளுக்கு பொட்டுவிட்டு நிற்கும் அவரது தார்மீக உணர்ச்சியை மட்டும் என்னால் பொறுக்கவே முடிந்ததில்லை.புதுவயில் தான் புதுமைகள் அதிகம் தோன்றின.புது முயற்சிகள் புது நாகரீகம்,புதுமை பெண் எழுச்சி,புதுக்கவிதை-இவைதோன்றின.இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நாந்தான் ஆராய்ச்சி பொருளாக அமைந்தேன்.பெண்களுக்கு சம அந்தஸ்த்து வழங்க வேண்டுமா? வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே,பெண்விடுதலை அவசியம் என்று முடிவு கண்டு,நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர்.இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று
(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் 'என் கணவர்' என்ற தலைப்பில் செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை)


சுஜாதா பற்றி திருமதி சுஜாதா .....

ஆபீஸ் முடிந்து வந்தால் கிடுகிடுன்னு எழுத உட்கார்ந்து விடுவார். ராத்திரிகளில் கூட அவர் எந்த நேரம் தூங்குவார்னு தெரியாது. ஒரு மணியோ, ரெண்டு மணியோ கூட ஆகும்.
பசங்க என்ன வகுப்பு படிக்கிறாங்க, எப்படி படிக்கிறாங்க, எப்போ பரீட்சை, எதுவுமே அவருக்குத் தெரியாது. நாங்க வெளியூர் போயிருந்தால் வீட்டை பூட்டிட்டு வெளியே போகணும்கிறது கூட அவருக்குத் தெரியாது. கிளம்பி போயிட்டே இருப்பார். சின்ன சின்ன ரெஃப்ரன்ஸ§க்குக் கூட கையில இருக்கிற காசையெல்லாம் போட்டு புத்தகம் வாங்கிட்டு வந்துடுவார். வீட்டுக்குன்னு, குழந்தைகளுக்குன்னு எதிர்கால திட்டம் எதுவும் அவருக்குக் கிடையாது. நல்லவேளை, எங்க வீட்ல பெண் குழந்தை இல்லாததால் இதெல்லாம் பெரிய விஷயமா தெரியலே!...
சில நேரங்கள்ல நினைச்சுப் பார்க்கிறப்போ கஷ்டமா இருக்கும். ஆனா வெளில காட்டிக்க மாட்டேன். அவர்கிட்டே எனக்கு ஏனோ அப்படியரு பயம் இருந்தது. அவர் பெரிய ஜீனியஸ், நான் சாதாரண உணர்வுகளுள்ள மனுஷி என்பதாலேயா? ரொம்பவும் நெருங்கி அல்லது இறங்கி வந்து என் பயத்தை அவர் போக்க முயற்சிக்காததாலா?... எனக்குத் தெரியலே! அவரோட ஐம்பது வயசுக்கு மேலத்தான் அந்த பயம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமா போச்சு!
அதுவும் கூட அவருக்கு ஹார்ட் பிராப்ளம் மாதிரி சில உடல் பிரச்னைகள் வந்து, நான் அதிக நேரம் அவருடன் இருந்து பணிவிடை செய்ய ஆரம்பித்த பிறகுதான்.
இவருக்குப் பெண் ரசிகைகள் நிறைய உண்டு. இவர் ‘பீக்’ல இருந்தப்போ எல்லாம் லேடீஸ்கிட்டேயிருந்து மாத்தி மாத்தி போன் கால்ஸ் வந்துட்டே இருக்கும். அதுல சில பெண்கள் சாதாரணமா பேசிட்டு வச்சிடுவாங்க. சிலர், என் குரலைக் கேட்டவுடனே போனை வச்சுடுவாங்க. நான் இல்லாத நேரமா திருட்டுத்தனமா பேசுவாங்க. அப்போல்லாம் மனசுக்கு வருத்தமா இருக்கும். இவர் சாதாரணமா, புகழ் இல்லாத மனிதரா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணும்!

எங்க ரெண்டு பேரோட இயல்புன்னு பார்த்தா நான் ஒரு துருவம்.... அவர் ஒரு துருவம்தான்! உறவினர்களோட பேசறது, வெளியே அவங்க வீட்டுக்குப் போறது, கோவிலுக்குப் போறது இதெல்லாம் எனக்குப் பிடிக்கும். ஆனால் அவருக்கு இதிலெல்லாம் பெரிய ஈடுபாடு கிடையாது. படிக்கணும்.. படிக்கணும்.. அல்லது எழுதணும்... எழுதணும்!... உண்மையைச் சொன்னா எனக்குக் கதைகள் படிக்கிறதில் எப்போதுமே பெரிய ஆர்வம் இல்லே!... அதெல்லாம் கனவுலக சப்ஜெக்ட்னு தோணும்!...
(சிநேகிதி இதழுக்கு திருமதி சுஜாதா தந்த பேட்டியிலிருந்து)

பரத்-பாரதி ஒற்றுமை:எனக்கும் காலை உணவு தோசை,காப்பி தான் ரொம்ப பிடிக்கும்.ஹி..ஹி



Monday, June 12, 2006

Are they Sleepy????













I got this forward from my friend.I couldn't stop laughing....
Is it real or they used any tricks??
How does the teacher remember their faces???How can the teacher find the guys/galz who sleep in the classroom??
muttai pottu kunjuporicha maathiri ore maathiri irukkaanga!!!!Anyway they are cute......:)


p.s:Namba fotovappathu avangalum ippdithaan nakkal pannuvaangalo!!!

Wednesday, June 07, 2006

புனேயில் ஒரு மழைக்காலம்

இந்த ஒரு வார மழையில் பூனவின் அடயாளங்கள் கொஞ்ஜம் மாறித்தான்ப்போயிருக்கிறது..இல்லை தன் நிஜ அடயாளத்தை பெற்றிருக்கிறது.ஏனெனில் பூனாவில் மழைக்காலம் சற்று நீண்டதாக இருக்கும்(அருகில் உள்ள லோனாவாலா இந்தியாவின் அதிக மழை பொழிவைப் பெறும் இடங்களில் ஒன்று).

கடந்த இரண்டு மாதங்களாக சுட்டெரித்து overtime பார்த்து வந்த சூரியன் இப்போது ஓய்வில் இருக்கிறது.தூக்கம் கலைந்த பின்னும் போர்வைக்குள்ளிருந்து வர மறுக்கும் schoolபையன் போல காலை 10 மணிக்குக்கூட மேகத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு வெளியெ வர மறுக்கிறது. மாலை நேரம் குளிர்ச்௪¢யாக ரம்மியமானதாக இருக்கிறது.அவ்வேளைகளில் பால்கனியில் உட்கார்ந்துகொண்டு ,காப்பி குடித்துக்கொண்டே மழையை ரசித்தால்...கவிதயெல்லாம் எழுதத்தோணும்...பயப்படவேண்டாம்...கவிதயெல்லம் எழுதி பயமுறுத்த மாட்டேன்.மழயைப் பற்றிய(மனுஷ்ய புத்திரனின்) இந்த கவிதை எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்

குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்

கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை

Friday, May 19, 2006

வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு...

நேற்று தேசிகனின் வலைதளத்தை மேய்ந்து கொண்டிருந்தபோது,சுஜாதாவின் "வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு..." என்ற கட்டுரை கண்ணில் பட்டது.பழைய கட்டுரைதான்....சுஜாதாவின் மிகசிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இதைக்கூறலாம்.கட்டுரை அதிக ஜோடனைகள்,பாசாங்குகள் இல்லாமல் நேர்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது.இத்ற்குக்காரணம்...இது அவரது சொந்த அனுபவம் என்பதால் கூட இருக்கலாம்(அவரின் இரு மகன்களும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்).கட்டுரையின் இறுதியில் அவரே இதையும் குறிப்பிடுகிறார்.Project நிமித்தம் வெளிநாடு சென்று..விசா மாற்றி...கம்பெனி மாறி..அங்கேயே settle ஆகும் மென்பொருள் வல்லுநர்கள் பற்றி சொல்ல விட்டுவிட்டார்.இனி கட்டுரயிலிருந்து ஒரு பகுதி...

இன்றைய நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் விதிவிலக்கில்லாமல் ஒரு கஸினோ சித்தப்பாவோ அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கனவு தேசத்தின் அருமை பெருமைகளை வருடாந்திர விஜயத்தில் எடுத்துக் கூறி அந்த ஆசை சின்ன வயசிலிருந்து இ¬ளிர்களிடம் விதைக்கப்படுகிறது. அது நிறைவேறுவதற்கான தெளிவான பாதையும் தெரியும். ஜிஆர்ஈ, டோஃபெல் எழுதுவது, இருக்கிற எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் தலா எழுபது எண்பது டாலர் அனுப்பி - விண்ணப்ப பாரம் பெற்று நிரப்பி அனுப்புவது, அதில் ஏதாவது ஒரு கல்லூரி இடம் கொடுக்க… விசாவுக்கென்று பாங்க் பாஸ் புக்கில் தற்காலிகமாக கடன் வாங்கி எட்டு லட்சம் பத்து லட்சம் காட்டுவது, படித்து முடித்து அடுத்த ப்ளேனில் திரும்பி வந்துவிடுவேன் என்று விசா ஆபீஸரிடம் புளுகுவது, அதை அவர்களும் சிரித்துக்கொண்டே நம்புவது - இது ஆண்களுக்கு.
பெண்களுக்கு மற்றொரு பாதை உள்ளது. இங்கே, எம்.சி.ஏ, பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவை படித்து இந்துவில் விளம்பரம் கொடுக்கும் அமெரிக்க என்.ஆர்.ஐ. மாப்பிள்ளைகளுக்குப் பதில் போட்டு கல்யாணம் செய்துகொள்வது. அதன் க்ரீன்கார்டு சிக்கல்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. இவர்களுக்கு எல்லாம் என் அறிவுரை-தாராளமாக அமெரிக்கா செல்லுங்கள். உங்கள் திறமையும் புத்திசாலித்தனத்தையும் அங்கு சென்று பயன்படுத்திப் படிப்பதில் எந்தவித ஆட்சேபணையும் - யாருக்கும் இருக்கக்கூடாது. வாழ்த்துக்கள். இந்த தாத்தாவிடமிருந்து ஒரு டாட்டா! ஆனால், ஒரு வேண்டுகோள். அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-
1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தௌ¤¢வாக அறிந்து கொள்ளுங்கள்.
2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.
3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)
4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.
இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

முழு கட்டுரையையும் படிக்கவிரும்புபவர்கள் இங்கே க்ளிக்கவும்

நன்றி:தேசிகன்



Thursday, May 04, 2006

கண்டிப்பா பயப்படணும் (அல்லது) பயப்படுவது மிகவும் அவசியம்



தலைப்பைப் பார்த்துக் குழம்ப வேண்டாம்."டர் நா ஸரூரி ஹை" படத்தோட Translation தான் அது.எப்டி கலக்கறோமா! சரி மேட்டருக்கு வருவோம்.கடந்த வாரம் மேற்சொன்ன இந்த (அபத்தமான)படத்தை பார்க்க நேர்ந்தது.படத்தின் 6 கதைகளையும் 6 வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.ராம் கோபால்வர்மாவின் கற்பனை கிணரு வற்றிவிட்டது போலும்..குமுததில் வரும் ஒருபக்கக்கதை போல 6 கதைகளை சேர்த்து முழு நீள படமொன்றை எடுத்துவிட்டார்.இதுபோல கதைகளை சேர்த்து எடுப்பது நல்ல உத்தி தான் என்றாலும் தேர்ந்தெடுத்த கதைகள் எல்லாம் பழசு, நாம் ஏற்கனவே அறிந்தது.அதனால் சுவாரசியம் ஏற்படவில்லை.
6 கதைகளில் அர்ஜுன் ராம்பால் வரும் கதை மட்டும் தேறுகிறது..அமிதாப் பச்சனை வீணடித்திருக்கிறார்கள்.
வழக்கம் போல பயமுறுத்துவதற்கு இந்த படத்திலும்இசையை தான் நம்பியிருக்கிறார்.இசையமைப்பாளரும் வாங்கிய காசுக்கு நன்றாக அடித்திருக்கிறார்.
ஒரு விஷயம் ஆச்சரியமாக இருந்தது....அமிதாப் திரையில் தோன்றும் முதல் காட்சியில்,திரையரங்கில் யாருமே கைதட்டவில்லை...அட ஒரு விசில் கூட இல்லை.இதற்கும் படம் ரிலீஸான இரண்டாம் நாள் சென்றுள்ளேன்.வட இந்தியாவின் Super starக்கே இந்த நிலமைதான்.காரணம்...

1)வட இந்தியர்கள் நம்மைப்போல் சினிமாகாரர்களை கொண்டாடுவதில்லை.சினிமாவை சினிமாவாகப்பார்கிறார்கள்.
2)ரிலீஸாகும் 75% படஙளில் அமிதாப் இருக்கிறார்.

(Assistant Dir:சார்,இந்த படத்தில் அமிதாப் பண்ற மாதிரி ரோல் ஒண்ணுமில்லை.
Director:அப்டீன்னா..ஒரு சீன்ல மட்டும் வர்ற அந்த Post man characterஐ பண்ண சொல்லு.)
Default actor!!

படத்தின் முதல் காட்சியில் ,ஒருவர் "டர் னா மான ஹை" பார்த்துவிட்டு தியேட்டர் காரரிடம் சென்று ராம்கோபால் வர்மாவின் address கேட்பார்.தியேட்டர் காரர் எதற்கெனக்கேட்பார்.அத்ற்கு இந்த முதல் ஆசாமி காசை திருப்பி வாஙணும் என்பார்.
படம் முடிந்து வெளியெ வரும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

Tuesday, May 02, 2006

நூறாவது நாள்



வெற்றிகரமான நூறாவது நாள்!
நான் புனே வந்து இன்றோடு 100 நாட்கள் ஆகின்றது.

Saturday, April 29, 2006

படித்ததில் பிடித்தது(1)

உன் பார்வைகள்
-----------------
காயங்களுடன் கதறலுடன்
ஓடி ஒளியுமொரு பன்றியைத்
துரத்திக் கொத்தும்
பசியற்ற காக்கைகள்
உன் பார்வைகள்
-கலாப்ரியா

ஒற்றை 'பூ'
----------------
தண்டவாளத்தில்
தலைசாய்ந்து கிடக்கும்
ஒற்றைப் பூ
நான்.

நீ
நடந்து வருகிறாயா?
இரயிலில் வருகிறாயா?

-பழனி பாரதி


ஒரு புள்ளியில்
-----------------
இனி பார்க்க
வேண்டும் என்கிற
ஆசைவருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப்
பார்த்துக் கொள்ளலாம்

எங்காவது
ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக்
கொள்ளட்டுமே

-அறிவு மதி


Thursday, April 20, 2006

அன்பே சிவம்


கடந்த வாரம்,அன்பே சிவம் படத்தை மீண்டும்(6வது முறையாக) பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.கமலின் எல்லா படஙளும் எனக்கு பிடிக்கும் என்றாலும்,இந்த படம் எனக்கு மிகப் பிடித்த (டாப் டென்) படங்களில் ஒன்று.
அண்மையில் கம்யூனிசம் பற்றி பேசும் எந்த தமிழ்படமும் வந்ததாக நினைவிலை.எந்த முன்னனி ஹீரோவும் ஏற்க தயங்கும் விகாரமான ரோலில் கமல் பின்னியெடுத்திருப்பார்.படதின் ஹைலைட்டே கமலுக்கும் மாதவனுக்கும் நடக்கும் conversations தான்(வசனம்:மதன்).
கமலுக்கு இணையான ரோல் மதவனுக்கு.மேடி கலக்கியிருப்பார். கமலின் இம்சை தாங்க முடியாமல் Give me a break man என புலம்புவது அழகு.freek out!
இந்தப் படத்தில் கமலின் நரம்புகள் கூட நடித்திருக்கும்.பெரிய சோடாபுட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு..ஒருமாதிரி இழுத்து,இழுத்து பேசுவார்.இதை படம் முழுவதும் ஒரேமாதிரியாக செய்திருப்பார்.gr8! (Flash backil அழகான கமலை ரசிக்கலாம்).
பாடல்களும் இப்படத்திற்கு plus(இசை விதயாசாகர்).குறிப்பக மது பாலகிருஷ்ணன் பாடிய "பூவாசம் புறப்படும் பெண்ணே" பாடல் அருமையாக இருக்கும்.படத்தில் சேர்க்கப்படாத SPB பாடல் ஒன்று இருக்கிறது."மெளனமே"எனத்துவங்கும் அப்பாடல் அக்மார்க் SPB மெலடி.
ஐந்தே நிமிடஙள் வந்தாலும் யூ.கி.சேது பட்டையை கிளப்பியிருப்பார்.
குறையே இல்லை என்று சொல்லமுடியாது.ஹீரோ வில்லன் மகளைக் காதலிப்பது,ஹீரொ 10 பேரை தனி ஆளாக நின்று பந்தாடுவது போன்ற தமிழ்படதுக்கே உரிய அபத்தங்கள் இதிலும் உண்டு.அதையெல்லாம் தாண்டி இப்படம் ஒரு வித்யாசமன முயற்சி.


கடைசிக்காட்சியில்,சந்தான பாரதி கமலை கொல்வதற்காக வந்துவிட்டு மனம் திருந்தி கொல்லாமல் விட்டுவிடுவார்.பின்பு கமலிடம்"திரும்பி வந்து என் பொழப்பில் மண்ணள்ளி போட்றாதீங்க "என்பார்.அதற்கு கமல் "பொழப்ப கெடுக்கமாட்டேன்..பொழச்சு போங்க " என்று சொல்லி சிரிப்பாரே.....Class

பி.கு:கமல் இந்த படத்திற்காக செலவழித்தது 12 கோடி.திரும்பக் கிடைத்தது 7கோடி


Tuesday, April 18, 2006

துக்கடா Post


- தலைவர்(அதாம்பா கமல் ஹாசன்) நடித்த,இயக்கிய,தயாரித்த,பாடிய...படங்களின் முழு பட்டியல்(வருடம் வாரியாக)இங்கு கிடைக்கிறது.

-பூனாவில் தமிழர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.இங்கு நம்மாட்கள் பஜனைமடம்ஒன்றை நடத்தி வருகிறார்கள்.வரும் 30ஆம் தேதி இங்கு 'சீதா கல்யாணம்' நடைபெறவிறுக்கிறது.போகலாமென்றிருக்கிறேன்.(மனசாட்சி: டாய் அன்னதானம் இருக்குன்னுதான போற!!)

-சமீபத்தில் படித்த கவிதைகளில் பிடித்தது

ட போல் மடங்கி கம்பளிப்பூச்சி
மூன்றாம் படியில் ஏறக்கண்டு
புறப்பட்டக் காலை ஒன்றாய் சேர்த்து
உற்றுப் பார்த்தேன்

அழகே நகரும்
அற்புதம் வியந்து
செருப்பைப் போட்டேன்

இரண்டாம் படியில் ஏறியபோது
நசுங்கும்படியாய்
வசமாய் மிதித்து
நடன்ந்தேன் வெளியே
ஒன்றாம் படியோ
நிகழ்ந்ததைக் கண்டு
திடுக்கிட்டிருக்க.


-கல்யாண்ஜி



கவிதை உபயம்:ப்ரசன்னா


Monday, April 17, 2006

thalaippu onnum thonala...

I made a list of books which i really wanted to read in my collage days.
That time I couldn't buy the books ...bcoz my "manasaatshi" was warning me
(magane, subjecta padichu,arrearsa mudhalla clear pannu..appuram
ithellam padikkalaam!).But now Im a freebird!Here are the books..

(1)Eppothum Penn -Sujatha

(2)Kaakidha Malargal -Adhavan

(3)18-avdhu Atchakkodu -Asoka Mithran

(4)Vishnu Puram -Jeyamohan

(5)Abithaa -La.sa.ra

(6)Thernthedukkappatta -Sujatha
sirukathaiga

(7)Natpukkaalam -Arivumathi

(8)ponniyin selvan -kalki(Eventhough Im notinterested in historical novels,I want to read this one)

(9)Auto-biography -Kushwant singh

(10)GodFather -Mario Puzo(Appdithaan nenaikkren)

(11)Da Vinci Code -Dan Brown(padikka Aarambichtomla!!)

.............Valarum
(manasaatshi:vairamuthu style???ithu romba over).
I hope ,I will get it one by one.

Monday, April 03, 2006

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா....



நான் பூனா வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.முன்பு இருந்ததை விட இப்போது என் ஹிந்தி அறிவு மேம்பட்டிருப்பதென்னவோ உண்மை தான்.ஆட்டோகாரர்களிடம் பேரம் பேசுமளவிற்கு கற்றுக்கொண்டுவிட்டேன்.எனினும் எனக்கு தெரிந்த மொத்த ஹிந்தி வார்தைகளையும் ஒரு ரயில்டிக்கெட்டின் பின்புறம் எழுதி விடலாம்.அவ்வளவுதான்.

ஊருக்கு வந்த புதிதில் சற்று கஷ்டமாக இருந்தது. நான் பிட்டடித்து பாஸ் செய்த 'பிராத்மிக்' பரீட்ஷை எந்த விதத்திலும் உதவவில்லை.ஹிந்தி தெரியாமல் பூனாவில் காலம் தள்ளுவதென்பது கொஞ்சம் கடினம்தான். இங்குள்ள மலயாளிகளும்,கொல்டிகளும் நன்றாக ஹிந்தி பேசுகிறார்கள்,காரணம் அவர்களது பாடதிட்டதில் ஹிந்தி கட்டாய பாடமாகவுள்ளது.ஆனால் நம் நாட்டில்,அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபதிற்காக நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டதின் விளைவு...என்னை போன்றோர் கஷ்டப்பட்டுக்கொண்டிருகிறோம்.இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் அந்த அரசியல்வாதிகளின் பேரன்களும் பேத்திகளும் ஹிந்தியை(கட்டாய பாடமாக)
படித்துக்கொண்டிருக்கிறார்களாம்.ஸாலா......

Sunday, April 02, 2006

முதல் பதிவு

வணக்கம்
பெயர்க்காரணம்:தென்றல் வந்து தீண்டும்போது...என்ற இந்தப்பாடல் எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் ஒன்று.இப்பாடலில் இளையராஜாவின் இசை தென்றலைப்போல நம்மை தீண்டிச்செல்வது உண்மை.

நான் இந்த வலைப்பதிவை தொடங்கியதற்கு முக்கிய காரணம்,அடுத்தவர்களின் பதிவுகளுக்கு comment எழுத எனக்கு ஒரு id வேண்டும் என்பதுதான்.என் தமிழறிவை போதிய அளவு வளர்த்துக்கொண்டபின் சொந்தமாக நிறைய எழுதலாமென இருக்கிறேன்.அதுவரை..........

நான் படித்து ரசித்த விஷயங்களை வேறு தளங்களிலிருந்து எடுத்து(அதாவது சுட்டு) இங்கு பதியப்போகிறேன்.
copy...paste பண்ணப்போறேங்ண்ணா!!!!!