Saturday, April 29, 2006

படித்ததில் பிடித்தது(1)

உன் பார்வைகள்
-----------------
காயங்களுடன் கதறலுடன்
ஓடி ஒளியுமொரு பன்றியைத்
துரத்திக் கொத்தும்
பசியற்ற காக்கைகள்
உன் பார்வைகள்
-கலாப்ரியா

ஒற்றை 'பூ'
----------------
தண்டவாளத்தில்
தலைசாய்ந்து கிடக்கும்
ஒற்றைப் பூ
நான்.

நீ
நடந்து வருகிறாயா?
இரயிலில் வருகிறாயா?

-பழனி பாரதி


ஒரு புள்ளியில்
-----------------
இனி பார்க்க
வேண்டும் என்கிற
ஆசைவருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப்
பார்த்துக் கொள்ளலாம்

எங்காவது
ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக்
கொள்ளட்டுமே

-அறிவு மதி


Thursday, April 20, 2006

அன்பே சிவம்


கடந்த வாரம்,அன்பே சிவம் படத்தை மீண்டும்(6வது முறையாக) பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.கமலின் எல்லா படஙளும் எனக்கு பிடிக்கும் என்றாலும்,இந்த படம் எனக்கு மிகப் பிடித்த (டாப் டென்) படங்களில் ஒன்று.
அண்மையில் கம்யூனிசம் பற்றி பேசும் எந்த தமிழ்படமும் வந்ததாக நினைவிலை.எந்த முன்னனி ஹீரோவும் ஏற்க தயங்கும் விகாரமான ரோலில் கமல் பின்னியெடுத்திருப்பார்.படதின் ஹைலைட்டே கமலுக்கும் மாதவனுக்கும் நடக்கும் conversations தான்(வசனம்:மதன்).
கமலுக்கு இணையான ரோல் மதவனுக்கு.மேடி கலக்கியிருப்பார். கமலின் இம்சை தாங்க முடியாமல் Give me a break man என புலம்புவது அழகு.freek out!
இந்தப் படத்தில் கமலின் நரம்புகள் கூட நடித்திருக்கும்.பெரிய சோடாபுட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு..ஒருமாதிரி இழுத்து,இழுத்து பேசுவார்.இதை படம் முழுவதும் ஒரேமாதிரியாக செய்திருப்பார்.gr8! (Flash backil அழகான கமலை ரசிக்கலாம்).
பாடல்களும் இப்படத்திற்கு plus(இசை விதயாசாகர்).குறிப்பக மது பாலகிருஷ்ணன் பாடிய "பூவாசம் புறப்படும் பெண்ணே" பாடல் அருமையாக இருக்கும்.படத்தில் சேர்க்கப்படாத SPB பாடல் ஒன்று இருக்கிறது."மெளனமே"எனத்துவங்கும் அப்பாடல் அக்மார்க் SPB மெலடி.
ஐந்தே நிமிடஙள் வந்தாலும் யூ.கி.சேது பட்டையை கிளப்பியிருப்பார்.
குறையே இல்லை என்று சொல்லமுடியாது.ஹீரோ வில்லன் மகளைக் காதலிப்பது,ஹீரொ 10 பேரை தனி ஆளாக நின்று பந்தாடுவது போன்ற தமிழ்படதுக்கே உரிய அபத்தங்கள் இதிலும் உண்டு.அதையெல்லாம் தாண்டி இப்படம் ஒரு வித்யாசமன முயற்சி.


கடைசிக்காட்சியில்,சந்தான பாரதி கமலை கொல்வதற்காக வந்துவிட்டு மனம் திருந்தி கொல்லாமல் விட்டுவிடுவார்.பின்பு கமலிடம்"திரும்பி வந்து என் பொழப்பில் மண்ணள்ளி போட்றாதீங்க "என்பார்.அதற்கு கமல் "பொழப்ப கெடுக்கமாட்டேன்..பொழச்சு போங்க " என்று சொல்லி சிரிப்பாரே.....Class

பி.கு:கமல் இந்த படத்திற்காக செலவழித்தது 12 கோடி.திரும்பக் கிடைத்தது 7கோடி


Tuesday, April 18, 2006

துக்கடா Post


- தலைவர்(அதாம்பா கமல் ஹாசன்) நடித்த,இயக்கிய,தயாரித்த,பாடிய...படங்களின் முழு பட்டியல்(வருடம் வாரியாக)இங்கு கிடைக்கிறது.

-பூனாவில் தமிழர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.இங்கு நம்மாட்கள் பஜனைமடம்ஒன்றை நடத்தி வருகிறார்கள்.வரும் 30ஆம் தேதி இங்கு 'சீதா கல்யாணம்' நடைபெறவிறுக்கிறது.போகலாமென்றிருக்கிறேன்.(மனசாட்சி: டாய் அன்னதானம் இருக்குன்னுதான போற!!)

-சமீபத்தில் படித்த கவிதைகளில் பிடித்தது

ட போல் மடங்கி கம்பளிப்பூச்சி
மூன்றாம் படியில் ஏறக்கண்டு
புறப்பட்டக் காலை ஒன்றாய் சேர்த்து
உற்றுப் பார்த்தேன்

அழகே நகரும்
அற்புதம் வியந்து
செருப்பைப் போட்டேன்

இரண்டாம் படியில் ஏறியபோது
நசுங்கும்படியாய்
வசமாய் மிதித்து
நடன்ந்தேன் வெளியே
ஒன்றாம் படியோ
நிகழ்ந்ததைக் கண்டு
திடுக்கிட்டிருக்க.


-கல்யாண்ஜி



கவிதை உபயம்:ப்ரசன்னா


Monday, April 17, 2006

thalaippu onnum thonala...

I made a list of books which i really wanted to read in my collage days.
That time I couldn't buy the books ...bcoz my "manasaatshi" was warning me
(magane, subjecta padichu,arrearsa mudhalla clear pannu..appuram
ithellam padikkalaam!).But now Im a freebird!Here are the books..

(1)Eppothum Penn -Sujatha

(2)Kaakidha Malargal -Adhavan

(3)18-avdhu Atchakkodu -Asoka Mithran

(4)Vishnu Puram -Jeyamohan

(5)Abithaa -La.sa.ra

(6)Thernthedukkappatta -Sujatha
sirukathaiga

(7)Natpukkaalam -Arivumathi

(8)ponniyin selvan -kalki(Eventhough Im notinterested in historical novels,I want to read this one)

(9)Auto-biography -Kushwant singh

(10)GodFather -Mario Puzo(Appdithaan nenaikkren)

(11)Da Vinci Code -Dan Brown(padikka Aarambichtomla!!)

.............Valarum
(manasaatshi:vairamuthu style???ithu romba over).
I hope ,I will get it one by one.

Monday, April 03, 2006

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா....



நான் பூனா வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.முன்பு இருந்ததை விட இப்போது என் ஹிந்தி அறிவு மேம்பட்டிருப்பதென்னவோ உண்மை தான்.ஆட்டோகாரர்களிடம் பேரம் பேசுமளவிற்கு கற்றுக்கொண்டுவிட்டேன்.எனினும் எனக்கு தெரிந்த மொத்த ஹிந்தி வார்தைகளையும் ஒரு ரயில்டிக்கெட்டின் பின்புறம் எழுதி விடலாம்.அவ்வளவுதான்.

ஊருக்கு வந்த புதிதில் சற்று கஷ்டமாக இருந்தது. நான் பிட்டடித்து பாஸ் செய்த 'பிராத்மிக்' பரீட்ஷை எந்த விதத்திலும் உதவவில்லை.ஹிந்தி தெரியாமல் பூனாவில் காலம் தள்ளுவதென்பது கொஞ்சம் கடினம்தான். இங்குள்ள மலயாளிகளும்,கொல்டிகளும் நன்றாக ஹிந்தி பேசுகிறார்கள்,காரணம் அவர்களது பாடதிட்டதில் ஹிந்தி கட்டாய பாடமாகவுள்ளது.ஆனால் நம் நாட்டில்,அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபதிற்காக நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டதின் விளைவு...என்னை போன்றோர் கஷ்டப்பட்டுக்கொண்டிருகிறோம்.இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் அந்த அரசியல்வாதிகளின் பேரன்களும் பேத்திகளும் ஹிந்தியை(கட்டாய பாடமாக)
படித்துக்கொண்டிருக்கிறார்களாம்.ஸாலா......

Sunday, April 02, 2006

முதல் பதிவு

வணக்கம்
பெயர்க்காரணம்:தென்றல் வந்து தீண்டும்போது...என்ற இந்தப்பாடல் எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் ஒன்று.இப்பாடலில் இளையராஜாவின் இசை தென்றலைப்போல நம்மை தீண்டிச்செல்வது உண்மை.

நான் இந்த வலைப்பதிவை தொடங்கியதற்கு முக்கிய காரணம்,அடுத்தவர்களின் பதிவுகளுக்கு comment எழுத எனக்கு ஒரு id வேண்டும் என்பதுதான்.என் தமிழறிவை போதிய அளவு வளர்த்துக்கொண்டபின் சொந்தமாக நிறைய எழுதலாமென இருக்கிறேன்.அதுவரை..........

நான் படித்து ரசித்த விஷயங்களை வேறு தளங்களிலிருந்து எடுத்து(அதாவது சுட்டு) இங்கு பதியப்போகிறேன்.
copy...paste பண்ணப்போறேங்ண்ணா!!!!!