Monday, April 03, 2006

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா....



நான் பூனா வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.முன்பு இருந்ததை விட இப்போது என் ஹிந்தி அறிவு மேம்பட்டிருப்பதென்னவோ உண்மை தான்.ஆட்டோகாரர்களிடம் பேரம் பேசுமளவிற்கு கற்றுக்கொண்டுவிட்டேன்.எனினும் எனக்கு தெரிந்த மொத்த ஹிந்தி வார்தைகளையும் ஒரு ரயில்டிக்கெட்டின் பின்புறம் எழுதி விடலாம்.அவ்வளவுதான்.

ஊருக்கு வந்த புதிதில் சற்று கஷ்டமாக இருந்தது. நான் பிட்டடித்து பாஸ் செய்த 'பிராத்மிக்' பரீட்ஷை எந்த விதத்திலும் உதவவில்லை.ஹிந்தி தெரியாமல் பூனாவில் காலம் தள்ளுவதென்பது கொஞ்சம் கடினம்தான். இங்குள்ள மலயாளிகளும்,கொல்டிகளும் நன்றாக ஹிந்தி பேசுகிறார்கள்,காரணம் அவர்களது பாடதிட்டதில் ஹிந்தி கட்டாய பாடமாகவுள்ளது.ஆனால் நம் நாட்டில்,அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபதிற்காக நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டதின் விளைவு...என்னை போன்றோர் கஷ்டப்பட்டுக்கொண்டிருகிறோம்.இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் அந்த அரசியல்வாதிகளின் பேரன்களும் பேத்திகளும் ஹிந்தியை(கட்டாய பாடமாக)
படித்துக்கொண்டிருக்கிறார்களாம்.ஸாலா......

4 comments:

REFLEX said...

Welcome to Pune and Welcome to blogging.
Thanx for the comment.

ragasiyamaai said...

Necessity is the mother of invention!
Hunger is the key to survival!
(over'a illa?)
anyways , even if you had learnt any amount of Hindi before coming here, you would definitely have found it difficult in Pune to cope up, unless you are forced to learn
which you are, now.
The same is the case with me in my campus in Delhi.
There are so many people from Tamil nadu, and others speak Emglish
But I forced myself to talk in Hindi with my donston'
isi liye mein ab thoda Hindi seekha
ye hi baath hai !
keep posting !

Anonymous said...

Hi Barath, Unaku Hindi na, enaku English,:), enna panrathu. Hindi mozhi-ya seekiram karka en vazhlthukkal - Sasi.

பரத் said...

சசி,
இந்தப் பதிவை நான் எழுதி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.இப்போது ஒரளவிற்கு ஹிந்தி பேசகற்றுக்கொண்டுவிட்டேன் :)