Wednesday, December 13, 2006

படித்ததில் பிடித்தது(2)

காடுகளும் வழித்துணைகளும்

மூன்று பேர்கள்
அமர்ந்திருக்கும் அறையில்
அனேகமாக யாராவது ஒருவர்
தனியே விடப்படுகிறார்

இருவர் ஆணாய்
ஒருவர் பெண்ணாய்
ஒருவர் ஆணாய்
இருவர் பெண்ணாய்
இருந்துவிட்டால்
இந்தக் கொடுமைகளுக்கு
முடிவே இல்லை

அந்த ஒருவர்
மயங்கி விழுகிறார்

தேம்பி அழுகிறார்

பெரிய தத்துவத்தையோ
கவிதையையோ
பேசமுற்படுகிறார்

கதவை திறந்து கொண்டு
வெளியேறுகிறார்

என்னன்னவோ
செய்ய வேண்டியிருக்கிறது
இந்த உலகில்
இன்னொருவரின்
கவனத்தை ஈர்க்க

நானாக இருந்தால்
ஒருவெடிகுண்டை
பற்றவைப்பது பற்றி யோசிப்பேன்

-மனுஷ்யபுத்திரன்

இது போன்ற தருணங்களில் அடிக்கடி சிக்கிக்கொள்வதாலோ என்னவோ இந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.இறுதி வரி அழகாக அதேசமயம் மன அழுத்தத்தின் உச்சத்தை உணர்த்துவதாக இருக்கிறது.மனுஷ்யபுத்திரனின் "என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" என்ற கவிதைத் தொகுப்பில் "காடுகளும் வழித்துணைகளும்" என்ற நீள் கவிதையின் கீழ் வருகிறது இப்பகுதி.