Tuesday, August 29, 2006

புத்தகங்கள்

Tagged by KK

One book that changed my life

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூவினால் எழுதப்பட்ட இருத்தலியல்(Existentialism) பற்றிய "The Stranger"(L'Étranger) என்ற நாவல்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.என் வாழ்க்கையில் என்று சொல்வதைக்காட்டிலும் என் மனப்போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
தனக்கு ஏற்படும் சுகதுக்கங்களை ஒரு வெளிமனிதனாக விலகி நின்று உற்றுநோக்கும் அதன் கதாநாயகனின்(Meursault) மனப்பங்கு என்னை மிகவும் கவர்ந்தது.
அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள இருத்தலியல் பற்றிய கருத்துகள் என்ன்னுள் பல வினாக்களை எழுப்பின.ஆல்பர்ட் காம்யூ, தான் ஒரு எக்ஸிஸ்டன்ஷியலிஸ்ட்டாக அடையாளம் காட்டப்படுவதை விரும்பாவிட்டாலும், எக்ஸிஸ்டன்ஷியலிசம் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு முதலில் பரிந்துரைக்கப்படும் நூல் "L'Étranger"
நிற்க...

இப்படியெல்லாம் எழுத இது போன்ற பெரிய பெரிய புத்தகங்களையெல்லாம் படித்திருக்க வேண்டும்.ஆனால் என் வாசிப்பு குமுதம்,விகடன்..இத்தோடு சரி ஹீ...ஹீ
இதுவரை..அப்படிப்பட்ட வாழ்வை மாற்றக்கூடிய புத்தகங்கள் எதையும் நான் படிக்கவில்லை.

The book you have read more than once

ஜேஜே சில குறிப்புகள் - சுந்திர ராமசாமி
முதல் வாசிப்பில் நிறைய புரியவில்லை என்பதால் மீண்டும் படித்தேன்.இன்னமும் அந்த புத்தகத்தில் எனக்கு புரியாத பகுதிகள் நிறைய உண்டு.சு.ரா வின் பாஷையிலேயே சொல்ல வேண்டும் என்றால்..ஒரு வேட்டை நாயின் தீவிரத்துடன் அவரது எழுத்துக்களை பிந்தொடர்ந்து...பாதிவழியில் மூச்சிரைத்து நின்று விட்டேன்.

துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
வாழ்வின் எதார்த்தங்களையும்,சிக்கல்களையும்,அழகினையும் தன் பயணத்தினூடாக விளக்க்கியிருப்பார்.உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தை எத்தனைமுறைவேண்டுமானாலும் படிக்கலாம்.

One book you would want on dessert island

ஆதவனின் சிறுகதைத்தொகுப்பு
(or)
அசோகமித்ரனின் கட்டுரைகள்(தொகுப்பு)
(or)
இரண்டும் :)

One book that made you laugh

ஆதலினால் காதல் செய்வீர் - சுஜாதா

one book that made me cry

இதுவரை அப்படி ஒரு புத்தகத்தைப் படிக்கவில்லை(மோசமாக எழுதப்பட்டிருக்கும் சில புத்தகங்களைப் படிக்கும்போது அழுகைவருவது வேறுவிஷயம்)

One book you wish you had written

சுஜாதாவின் படைப்புகள் அனைத்தையும்

One book that you wish had never been written

ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா
புரியவில்லை என்பதும் ஒரு காரணம்....
(சு.ரா: புரியாத எழுத்துகளில் இரண்டுவகை உண்டு.முதலாவது ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியது.பின்னது அதன் எதிமறை)

சாருவின் இந்த புத்தகம் இரண்டாவது வகை என நினைக்கிறேன்

One book you are currently reading

ஒன்றல்ல மூன்று புத்தகங்கள்
1) கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதாசுஜாதாவின் கட்டுரைகளைத் தொகுத்திருப்பது தேசிகன்
2)என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - மனுஷ்ய புத்திரன்
Sample கவிதை:

பாபருக்கு
வேண்டும் மசூதி

ராமருக்கு
வேண்டும் கோவில்

ஜனங்களுக்கு
வேண்டும் சுகாதாரமான
கழிப்பறைகள்
3)Bhagavat Gita -A rational enquiry
Prof Veerabathrappa

One book you have been meaning to read
லா.சா.ரா , பிரமிள், மெளனி,வண்ண நிலவன்,வண்ணதாசன்,காப்கா,தஸ்தோவெஸ்கி,எரிக்கா ஜங்,ஜேம்ஸ் தர் பர்,புதுமைப் பித்தன்...
இவர்களின் புத்தகங்களில் தலைக்கு ஒன்றாவது படித்துவிட வேண்டும்.

Tagging anusuya to write 'book post'

Friday, August 25, 2006

வேட்டையாடு விளையாடு Review(India Glitz)


There is a universal charm to a policeman in search of clues to crack a series of murders. Its attraction is almost primordial. And when you have somebody like Kamal who can get into the flesh of any character and Gautham Menon, who knows how to set up the right ambient mood and field, what you have is two and half hours of sustained and quality entertainment. Vettaiyaadu Vilaiyaadu is proof for that.

It is technically superior ----- the edges are pared down to give that steely and glassy Yankee feel. The lighting is moody and menacing in turns, just the backdrop for an urban thriller. The editing is cutting edge ---where events coalesce in easy and effective links. The way Gautham explores New York is something that even Woody Allen would have approved of.
The broad plot of a policeman trying to crack a case ---- a variation of a cat and mouse theme ---- gets the right backing from Gautham, who goes beyond Kaakha Kaakha where he showed what happens when a cop uses his brawn and pin-pointed aggression. Here he lets the man use his mental craft.

Gautham sets the mood right from the start as he introduces DCP Raghavan (Kamal Haasan) in typical style. Raghavan sets off on the trail of the killers of Rani, the daughter of Arogya Raj (Praksh Raj). Raghavan and Arogya Raj go back long way together. They share a unique relationship.

While Raghavan is stunned by the gut-wrenching morbidity in Rani’s killing, Arogya Raj and his family set off to New York to escape from the memories of their daughter. But there he is hacked and bumped off in the most violent of manners.
Raghavan is off to crack this perplexing mystery. In NY, he runs into Aradhana (Jyothika). Raghavan is a widower (his wife Kamalini is taken out by thugs) while Aradhana is trying to get out of a failed marriage. The two make a pair. And Raghavan gets down catching the killers with the help of American police.

It is slick and shiny all through with all the pauses and poise that such a script requires. Kamal’s acting need not be elaborated. He brings a sharp idiom to the role of a cop who has to hunt to some faceless killers.

Kamal’s strength is that he can shine in even lonely roles (even when he can’t feed off from somebody else’s intensity). Kamal understates and underplays the cop character with remarkable discernment. The narrative simply unfolds from him. Jyothika too is quiet and restrained. Kamalini is cute and plays a simple role with elegance. Prakash Raj is as ever bankable. This man never ceases to amaze us with his variety. Balaji as the villain fits the bill.
Harris Jeyaraj and Gautham share a unique rapport. Harris songs not only rock but the re-recording too is simply superb.

The other hero of the film is Ravi Varman, the camera man. He has given the entire flavor and feels to the movie. In a lesser craftsman’s hand, the film would not have got this polish and finesse. His visual metaphors are apt and the lighting is amazing. The angles too are novel and keep you interested all through.

Gautham knows how to let the story flow in trendy narratives. He has the feel for the medium as well he knows how to wrest good performances from his team. In the event, Vettaiyaadu Vilaiyaadu is a worthy successor to his Kaakha Kaakha.

Thanks: Indiaglitz.com

Thursday, August 17, 2006

ஐபெல் டவர்(Eiffel Tower) -விற்பனைக்கு!




"உண்மை பலநேரங்களில் கற்பனையைவிட சுவாரஸியமானது"

ஐபெல் டவரை(Eiffel Tower) ஒருவர் இரண்டுமுறை விற்றிருக்கிறார் என்று படித்தபோது எனக்கும் இப்படித்தான் தோன்றியது. LIC கட்டிடத்தை விற்பதாக திரைப்படங்களில் நகைச்சுவைக்காட்சிகள் வந்தபோது கூட இந்த கோணத்தில் சிந்திததில்லை."King of all con men " என்று அழைக்கப்படும் Victor Lustig என்பவர் தான் அந்த மகாஎத்தன்.

1890-ல் செக்கோஸ்லுவாக்கியாவில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர் Victor Lustig .சிறுவயதிலேயெ பல மொழிகளைப் பேசக் கற்றுக்கொண்ட Lustig சக மனிதர்களின் பழக்கவழக்கங்களையும்,பல்வீனங்களையும் எளிதில் கிரகிக்கும் திறன் கொண்டிருந்தார்.தனது 20வது வயதில் ஒரு சிறந்த கான் ஆர்டிஸ்டாக(Con-Artist) மலர்ந்த அவர் தன் 30வது வயதில் போலீஸால் பெரிதும் தேடப்படுபவராக(Most wanted) தேர்ந்திருந்தார்(!).

சில்லறை பித்தலாட்டங்களில் போரடித்துப்போன Lustig புதியதிட்டம் ஒன்றை தீட்டினார்.அத்ற்காக அவ்ர் கண்டறிந்ததுதான் Money Printing Machine.அந்த எந்திரத்தில் 100$-ஐ வைத்தால் 6 மணி நேரத்தில் மற்றுமொரு புதிய 100$ நோட்டினை(வேறு சீரியல் நம்பர்களுடன்)வெளித்தள்ளும்.இதனை 50,000$ வரை விற்றிருக்கிறார்.விற்ற 12 மணிநேரத்திற்குப்பிறகு அந்த டுபாகூர் எந்திரம் தன் வேலையைக் காட்டத்துவங்கிற்று.அதாவது வெறும் வெள்ளைத்தாளை கக்கத்த் தொடங்கியது.வாங்கியவர்கள் Victor Lustig-ன் கடையை முற்றுகை இடத்துவங்கினார்கள்.அச்சமயத்தில் அவர் வேறொரு தேசத்தில் பறந்து கொண்டிருந்தார்.

1925-ல், முதலாம் உலக யுத்ததிற்கு பிறகு பிரான்சில் தொழிற்புரட்சி ஏற்பத்துவங்கியிருந்த காலமது.அப்போது அங்கு தங்கியிருந்த Lustig-ன் கவனத்தை கவர்ந்தது,அன்றைய நாளிதளில் வெளியாகியிருந்த செய்தி ஒன்று.அதன் தலைப்பு இது தான்

"Eiffel Tower in drastic need of renovation"
ஐபெல் டவரை பராமரிப்பதில் அரசிற்குண்டான கஷ்டங்களையும்,அது முழுமையாக புதுப்பிக்கபடவேண்டியதன் அவசியத்தையும் அக்கட்டுரை அலசியிருந்தது.டவரை அகற்றிவிட்டால் கூட பரவாயில்லை என்பதுபோன்ற செய்திகளை வெளியிட்டிருந்தது அப்பத்திரிக்கை.இதனைப் படிக்க படிக்க Lustig-ன் மனதில் ஒரு திட்டம் உருவானது.ஒருவேளை அரசு ஐபெல் டவரை விற்க நேர்ந்தால்!

Lustig உடனடியாக செயலில் இறங்கினார்.ஒரு அரசு அதிகாரின் உதவியுடன் அரசு முத்திரை இடப்பட்ட தாள்களைப்பெற்றார்.அதனைக் கொண்டு பிரான்சின் முன்னணி இரும்பு வியாபாரிகள் சிலருக்கு ரகசியக்கூட்டம் ஒன்றிற்கான அழைப்பை விடுத்தார்."Deputy director General of the Ministry of Mail and Telegraps" என்று ஒரு பதவியை தனக்குத்தானே அளித்துக்கொண்டார்.அவரது நண்பர் டாப்பர் டான் தான் அவரது Personal secretary.இந்த சந்திப்பினை பிரான்சின் மிகப்பெரிய ஹோட்டல்களில் ஒன்றான Crillonல் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த ரகசிய சந்திப்பில்(!) ஐபெல் டவரினால் அரசிற்கு ஏற்படும் சங்கடங்களையும்,அரசு அதனை விற்க முன்வந்திருப்பதாகவும் சாதுர்யமாகப் பேசினார்.பெயர் பெற்ற,நேர்மையான வியாபாரிகளை மட்டுமே அரசு பேரத்திற்கு அழைத்திருப்பதாகக் கூறினார்.ஐபெல் டவரை விற்க மக்கள் கடும்எதிர்ப்பு தெரிவிப்பார்களென்பதால்,இந்த ஒப்பந்தமும்,வாங்குபவர் பற்றிய விபரங்களும் ரகசியம்மாக வைத்திருக்கப்படும் என்று உறுதி கூறினார்.இதில் Mr.Poisson என்பவர் ஆர்வமாக இருப்பதை உணர்ந்து கொண்ட Lustig,அவரைத்தனியாக அழைத்து ஒப்பந்தத்தை பேசி முடித்தார்.ஐபெல் டவரை ஒரு பெரிய தொகைக்கு விற்றார்.இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்ன தெரியுமா?தான் ஒரு அரசு அதிகாரி என்பதால் தன்க்கு சம்பளம் குறைவு என்றும் ,இந்த ஒப்பந்ததை அவர் பெயரில் முடிக்க தனக்கு லஞ்சம் வெண்டும் என்று ஒரு பெரிய தொகையும் Poisson-னிடமிருந்து பெற்று கொண்டு விட்டார்.பணத்தை வாங்கிக்கொண்டு வெளி நாட்டுக்குப் பறந்தவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.பணத்தை ஏமந்தவர் போலீஸில் புகார் கொடுக்கவில்லை.தன் மானம் போய்விடும் என்று கருதி பேசாமல் இருந்து விட்டார்."அட இது நல்லயிருக்கே" என்று நினைத்தவர் மீண்டும் ஒருமுறை இதேபோன்று மற்றொரு நபரிடம் விற்றிருக்கிறார்.ஆனால் இம்முறை பணத்தை இழந்தவர் போலீஸில் புகார் செய்துவிட வேறு வழியில்லாம அமெரிக்காவிற்கு பறந்து விட்டார்.அதன் பிறகு அவர் பிரான்சுக்குத்திரும்பவே இல்லை.

அடுத்து Victor Lustig தன் கைவரிசையைக் காட்டியது பொது மக்களிடம் அல்ல,மாறாக அக்காலகட்டத்தில் அமெரிக்காவில் மிகப்பெரிய கிரிமினல்லாக இருந்த Al Capone னிடம்.அவரிடம் தனக்கு 500,000டாலர்களைத்தந்தால் ஒரு வணிகத்தின் மூலம் அறுபதே நாட்களில் இருமடங்காக்கித்தருவதாகக் கூறியிருக்கிறார்.இதற்கு ஒத்துக்கொண்ட Capone..ஏமாற்ற நினைத்தால் என்ன நடக்கும் என்பதையும் எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.பணத்தை ஒரு வங்கியில் பத்திரமாக பொட்டுவிட்டு Lustig ஹாயாக ஊர்சுர்றியிருக்கிறார்.60 நாட்களுக்குப்பின் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு Capone-ஐ சந்தித்திருக்கிறார்.தன் முயற்சியில் தோல்வி அடைந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.ஆத்திரமடைந்த capone க்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறார்.ஆம் அவரது 50,000 டாலர்களையும் திருப்பித் தந்திருக்கியிருக்கிறார்.இதனால் ஆசரியமடைந்த capone - இவரது நேர்மையை பாராட்டி 1000 டாலர்களை இவருக்கு பரிசளித்திருக்கிறார்.அவருக்கு வேண்டியதும் அதுதானே! தான் ஏமாற்றப்பட்டதைக்கூட உணராத Capone - ஐ பார்த்து புன்னகைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் Lustig.மனித உணர்வுகளைப்படிக்கத்தெரிந்த அவரது திறமைக்குக் கிடைத்த பரிசு அது.

அதன் பின் பல ஆண்டுகளுக்குப்பிறகு 1935 -ல் போலி டாலர்களைக் கைமாற்றும் போது போலீஸில் பிடிபட்ட Lustig, 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.தனது இறுதி காலத்தை 'அல்கார்ட்ஸ்' சிறையில் கழித்தார்.அங்கு தனது சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டு,பின் போலீஸாரால் வேறு ஒரு அறைக்கு அனுப்பப்பட்டார்.அந்த சககைதியின் பெயர் Al Capone !.

1947-ல் நிமோனியா காய்ச்சல் கண்டு சிறையிலேயே இறந்து போனார் Lustig.அவரது இறப்பு சான்றிதழ் படிவத்தை நிரப்பிக்கொண்டுவந்த அலுவலர் OCCUPATION என்ற கட்டத்தின் அருகில் சற்று நிறுத்தி,யோசித்தார்..பின்பு SALES MAN எனநிரப்பினார்.

"There's a suker born every minute"
-P.T.Barnum

Thursday, August 03, 2006

Lajjo-மணிரத்னத்தின் அடுத்த படம்!!!


நல்ல சினிமாமீது நம்பிக்கை உள்ள தமிழ் ரசிகர்களின் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி மணிரத்னம் தனது அடுத்த ஹிந்தி படத்தை துவக்கி உள்ளார்.

பாபி பேடியுடன் மணிரத்னம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசை நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்,ஒளிப்பதிவு ப்.சி.ஸ்ரீராம்.நல்ல கலைஞர்களெல்லாம் இப்படி ஹிந்திக்குப் போய்விட்டால்...பேரரசு,எஸ்.ஜே.சூர்யா..இவர்களின் படங்கள் 100 நாள் ஓடுவதில் வியப்பேதும் இல்லை.
மணிரத்னம் ஏன் இப்படி ஹிந்திக்கு ஓடுகிறார் என்பது புரியவில்லை?அங்குதான் நிறைய காசு தருகிறார்கள் என்பதாலா?இல்லை நல்ல ரசிகர்கள் அங்குதான் இருக்கிறார்களா?அதிகமான மக்களை சென்றடைய ஹிந்திதான் சரியான ஊடகம் என்றாலும்,தமிழில் எடுத்து பின் டப் செயப்பட்ட படங்கள் தான் இந்திய அளவில் பேசப்பட்டன(ரோஜா,பம்பாய்).தில் ஸே,யுவா போன்ற படங்கள் திரையிடப்பட்ட ஒரேவாரத்தில் கால் நீட்டி குப்புறப் படுத்துக்கொண்டுவிட்டன..

"குரு"படம் அம்பானி பற்றிய கதை என்பதால் ஹிந்தியில் எடுத்தால் தான் பொருத்தமாக இருக்கும்..OK.ஆமிர்கானையும்,கரீனா கபூரையும் வைத்து ராஜஸ்தான் based lovestory எடுக்கவாண்டியதன் அவசியம் என்னவோ?(கேட்டா படைப்பு சுதந்திரம்னு சொல்லுவாங்க)

2008-ல் 'The Mahabarat Trilogy' என்ற மிகப்பெரிய படைப்பை துவங்க இருக்கிறார்.அதயாவது ஆங்கிலத்தில் எடுப்பார் என்று நம்புவோம்.
Lajjo-shy girl