Wednesday, June 28, 2006

வீடு


"வீடு பட சிடி இருக்கா? "

அந்த (வாடகை)சிடி கடைக்காரர் ஏற இறங்கப் பார்த்தார். "இல்லைங்களே அடுத்தவாரம் சென்னை போகும்போது வாங்கிட்டு வறேன்" என்று சொல்லி பெயரைக்குறித்துக்கொண்டார்.
அருகில் இரு பெண்கள் கஜினி சிடி ரிட்டர்ன் செய்வதற்காக நின்று கொண்டிருந்தார்கள்.அவர்கள் என்னை ஒரு Intellectual என்று நினைத்திருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டு ஒரு look விட்டேன்(மேட்டுக்குடி படத்தில் கவுண்டமணி விடுவது போல).ஆனால் ஏதோ ஒரு ஜந்துவைப்பார்ப்பது போல அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.மெதுவாக அங்கிருந்து நடையைக்கட்டினேன் .

இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது,ஒருகாலத்தில் இந்தப்படத்தின் பெயரைக்கேட்டாலே தலைதெறிக்க ஓடுவேன்.நான் 2nd std அல்லது 3rd std படிக்கும் போது இந்தப்படம் வெளியானது என்று நினைக்கிறென்.தேசிய விருது வாங்கி சீக்கிரமே DDக்கு உடைமையாகிவிட்ட படமிது.பிராந்திய மொழிப்பட வரிசையிலும்,ஞாயிரு மாலைப் படவரிசையிலும் மாறி மாறி ஒளிபரப்பி இம்சித்தார்கள். அப்போதெல்லாம் (பெயர் தெரியாத படமாக இருந்தால் )Title போடும்போது உன்னிப்பாக கவனிப்பேன்.சண்டைப்பயிற்சி என்ற slide வந்தால் சரி இது பார்ப்பதற்கு உகந்த படம் என்று முடிவு செய்து விடுவேன்.படதில் இடம்பெற்றிருக்கும் மொத்த சண்டைக்காட்சிகளின் எண்ணிக்கையைக்கொண்டு தான் அதன் தரத்தை நிர்ணயிப்பேன்.அந்த அளவுகோலின் படி 'வீடு' நான் பார்ப்பதற்கு அருகதயற்ற படம்.அதுவும் இந்தப்படத்தில் ஒரு பாடல் காட்சியோ,ஒரு நகைச்சுவைக்காட்சியோ கூடக்கிடையாது.அப்போது இந்தப்படத்தைப்பற்றிய என் கருத்து "இது மிகவும் மெதுவான படம்,எல்லாரும் மெதுவாகப் பேசுவார்கள்,மெதுவாக நடப்பார்கள்,அதுவும் அந்த தாத்தா ரொம்ப slow, அவ்வளவுதான்.
அப்போது மதியம் மாநில மொழிப்படங்களை Alphabetic ordaரில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்,அதாவது மராத்தி,ஒரியா,பஞ்ஜாபி,தமிழ்,தெலுகு என்று.இதில் தமிழும் தெலுங்கும் விதிவிலக்கு.தமிழும் தெலுங்கும் மாறி மாறி முதலில் வரும்.பெரும்பாலும் தமிழ் முதலில் வரும்.அந்தவாரம் என்ன படம் என்று ஞாயிரு காலை அறிவிப்புகளில் தான் தெரிய வரும்.அந்த வரிசயில் வீடு,சந்தியாராகம் இதெல்லாம் ஒளிபரப்பப்பட்டால்,பயங்கரமாகக்கோபம் வரும்.

ஆனால் இப்போது ரசனையெல்லாம் மாறி அல்லது மேம்பட்டு(கண்டுகாதீங்க!) மகேந்திரன்,பாலுமகேந்திரா படமெல்லாம் பார்க்கத்தோன்றுகிறது.1988-ல் வெளியான இந்தப்படம் பாலு மகேந்திராவின் masterpiece என்று வர்ணிக்கப்படுகிறது.படத்தின் கருவும்,காட்சியமைப்புகளும் நிஜத்திற்கு ஆருகில் இருந்தது என்று சொல்வதைக்காடிலும் நிஜமாக இருந்தது என்றே சொல்லாம்.வேலைக்குப்போகும் ஒரு Lower middle class பெண் வீடுகட்ட ஆசைப்பட்டு,அதற்காக அவள் படும் கஷ்ட்டங்களை மிக இயல்பாக விவரிக்கும் படம் .அர்ச்சனா,சொக்கலிங்க பாகவதரின் நடிப்புகள் சிறப்பாகப் பேசப்பட்டன.அர்ச்சனா சிறந்த நடிகைக்கான தெசிய விருதினை இந்தப்படத்தின் மூலம் பெற்றார்.இளையராஜாவின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதுவும் "How to name it" ஆல்பத்திலிருந்து சில பகுதிகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்ற செய்தி இப்படத்தைப்பார்க்கும் ஆவலை மேலும் தூண்டுகிறது.பாலு மகேந்திரா commercial சமரசங்கள் (சில்க் dance)எதுவும் செய்துகொள்ளாமல் எடுத்த படமிது.

மீண்டும் ஒரு தரம் முதல் தடவையாக இந்தப்படத்தைப் பார்க்கப்போகிறேன்!!

Saturday, June 17, 2006

என் கணவர்....






பாரதி, சுஜதா....
இவர்கள் இருவரிடமும் பெரிதாக ஒற்றுமைகள் எதுவும் இல்லை.இருவரும் பிரபலங்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள் என்பதைத்தவிர....இருவரையும் ஒப்பிடவும் முடியாது.ஆனால் இவர்களின் மனைவிகள் இவர்களைப்பற்றி சொன்ன கருத்துக்களில் நிறைய ஒற்றுமை இருக்கிறது.செல்லம்மாள் பாரதிபற்றியும்,திருமதி சுஜாதா சுஜாதா பற்றியும் குறிப்பிட்டவற்றை இங்கு தந்துள்ளேன்.இருவரும் சராசரி வாழ்வுக்க்காக தவித்திருக்கிறார்கள் எனத்தெரிகிறது.பிரபலஙளின் மனைவி என்பது வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு வெண்டுமானால் பன்னீராக இருக்கலாம்...ஆனால் அவர்களுக்கு அது வெந்நீர் தான் போலும்.இதில் செல்லம்மாளின் பாடு ரொம்பவே திண்டாட்டம்.தமது கதைகளில் அல்ட்ரா மாடர்ன் பெண் கதாப்பாத்திரங்களை உலவ விடுபவர் சுஜாதா,அவரின் மனைவி இவ்வளவு கட்டுப்பட்டியானவர் என்பது ஆச்சரியம்.எனக்கும் பாரதிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது,அது கட்டுரையின் இறுதியில்....

பாரதிபற்றி செல்லம்மாள் ..

உலகத்தோடொட்டி வாழ வகையறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேனென்றால் உஙளுக்கு சிரிப்பாகத்தான் இருக்கும்.யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்,ஆனால் கவிஞனின் மனைவியாயிருப்பது கஷ்டம் அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரெமாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.ஏகாந்த்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவருங்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும்,ஆனால் மனைத்தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலுறுக்கமுடியுமா?கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.கடவுளை பக்தி செய்யும் கவிஞன்,காவியம் எழுதும் கவிஞன்,இவர்களை புற உலக தொல்லைகள் சூழ இடமில்லை.எனது கணவரோ கற்பனைக்கவியாக மட்டுமில்லாமல் தேசியக்கவியாகவும் விளங்கியவர்.அதனால் நான் மிகவும் கஷ்ட்டப்பட்டேன்.கவிதை வெள்ளத்தை அணை போட்டு தடுத்தது அடக்குமுறை.குடும்பமே தொல்லைக்குள்ளாகியது.

காலையில் எழுந்ததும் கண்விழித்து,மேநிலைமேல் மேலைசுடர் வானை நோக்கி வீற்றிருப்பார்.ஸ்நானம் ஒவ்வொருநாள் ஒவ்வொரு விதத்தில் அமையும்.சூரியஸ்நானம்தான் அவருக்குப்பிடித்தமானது.வெளியிலே நின்று சூரியனை நிமிர்ந்து பார்ப்பது தான் வெய்யற்க்குளியல்.சூரியகிரகணம் கண்களில் உள்ள மாசுகளை நீக்கும் என்பது அவரது அபிப்பிராயம்.காலை காப்பி தோசை பிரதானமயிருக்கவேண்டும் அவருக்கு.தயிர்,நெய்,புது ஊறுகாய் இவைகளை தோசயின் மேல் பெய்து தின்பார்.அவருக்குப் பிரியமான பொருளை சேகரித்துக்கொடுத்தால்,அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தை புசித்து விடுவார்கள்.எதை வேண்டுமானால் பொருக்கமுடிய்ம் ஆனல் கொடுத்த உணவை தாம் உண்ணாமல் பறவைகளுக்கு பொட்டுவிட்டு நிற்கும் அவரது தார்மீக உணர்ச்சியை மட்டும் என்னால் பொறுக்கவே முடிந்ததில்லை.புதுவயில் தான் புதுமைகள் அதிகம் தோன்றின.புது முயற்சிகள் புது நாகரீகம்,புதுமை பெண் எழுச்சி,புதுக்கவிதை-இவைதோன்றின.இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நாந்தான் ஆராய்ச்சி பொருளாக அமைந்தேன்.பெண்களுக்கு சம அந்தஸ்த்து வழங்க வேண்டுமா? வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே,பெண்விடுதலை அவசியம் என்று முடிவு கண்டு,நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர்.இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று
(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் 'என் கணவர்' என்ற தலைப்பில் செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை)


சுஜாதா பற்றி திருமதி சுஜாதா .....

ஆபீஸ் முடிந்து வந்தால் கிடுகிடுன்னு எழுத உட்கார்ந்து விடுவார். ராத்திரிகளில் கூட அவர் எந்த நேரம் தூங்குவார்னு தெரியாது. ஒரு மணியோ, ரெண்டு மணியோ கூட ஆகும்.
பசங்க என்ன வகுப்பு படிக்கிறாங்க, எப்படி படிக்கிறாங்க, எப்போ பரீட்சை, எதுவுமே அவருக்குத் தெரியாது. நாங்க வெளியூர் போயிருந்தால் வீட்டை பூட்டிட்டு வெளியே போகணும்கிறது கூட அவருக்குத் தெரியாது. கிளம்பி போயிட்டே இருப்பார். சின்ன சின்ன ரெஃப்ரன்ஸ§க்குக் கூட கையில இருக்கிற காசையெல்லாம் போட்டு புத்தகம் வாங்கிட்டு வந்துடுவார். வீட்டுக்குன்னு, குழந்தைகளுக்குன்னு எதிர்கால திட்டம் எதுவும் அவருக்குக் கிடையாது. நல்லவேளை, எங்க வீட்ல பெண் குழந்தை இல்லாததால் இதெல்லாம் பெரிய விஷயமா தெரியலே!...
சில நேரங்கள்ல நினைச்சுப் பார்க்கிறப்போ கஷ்டமா இருக்கும். ஆனா வெளில காட்டிக்க மாட்டேன். அவர்கிட்டே எனக்கு ஏனோ அப்படியரு பயம் இருந்தது. அவர் பெரிய ஜீனியஸ், நான் சாதாரண உணர்வுகளுள்ள மனுஷி என்பதாலேயா? ரொம்பவும் நெருங்கி அல்லது இறங்கி வந்து என் பயத்தை அவர் போக்க முயற்சிக்காததாலா?... எனக்குத் தெரியலே! அவரோட ஐம்பது வயசுக்கு மேலத்தான் அந்த பயம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமா போச்சு!
அதுவும் கூட அவருக்கு ஹார்ட் பிராப்ளம் மாதிரி சில உடல் பிரச்னைகள் வந்து, நான் அதிக நேரம் அவருடன் இருந்து பணிவிடை செய்ய ஆரம்பித்த பிறகுதான்.
இவருக்குப் பெண் ரசிகைகள் நிறைய உண்டு. இவர் ‘பீக்’ல இருந்தப்போ எல்லாம் லேடீஸ்கிட்டேயிருந்து மாத்தி மாத்தி போன் கால்ஸ் வந்துட்டே இருக்கும். அதுல சில பெண்கள் சாதாரணமா பேசிட்டு வச்சிடுவாங்க. சிலர், என் குரலைக் கேட்டவுடனே போனை வச்சுடுவாங்க. நான் இல்லாத நேரமா திருட்டுத்தனமா பேசுவாங்க. அப்போல்லாம் மனசுக்கு வருத்தமா இருக்கும். இவர் சாதாரணமா, புகழ் இல்லாத மனிதரா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணும்!

எங்க ரெண்டு பேரோட இயல்புன்னு பார்த்தா நான் ஒரு துருவம்.... அவர் ஒரு துருவம்தான்! உறவினர்களோட பேசறது, வெளியே அவங்க வீட்டுக்குப் போறது, கோவிலுக்குப் போறது இதெல்லாம் எனக்குப் பிடிக்கும். ஆனால் அவருக்கு இதிலெல்லாம் பெரிய ஈடுபாடு கிடையாது. படிக்கணும்.. படிக்கணும்.. அல்லது எழுதணும்... எழுதணும்!... உண்மையைச் சொன்னா எனக்குக் கதைகள் படிக்கிறதில் எப்போதுமே பெரிய ஆர்வம் இல்லே!... அதெல்லாம் கனவுலக சப்ஜெக்ட்னு தோணும்!...
(சிநேகிதி இதழுக்கு திருமதி சுஜாதா தந்த பேட்டியிலிருந்து)

பரத்-பாரதி ஒற்றுமை:எனக்கும் காலை உணவு தோசை,காப்பி தான் ரொம்ப பிடிக்கும்.ஹி..ஹி



Monday, June 12, 2006

Are they Sleepy????













I got this forward from my friend.I couldn't stop laughing....
Is it real or they used any tricks??
How does the teacher remember their faces???How can the teacher find the guys/galz who sleep in the classroom??
muttai pottu kunjuporicha maathiri ore maathiri irukkaanga!!!!Anyway they are cute......:)


p.s:Namba fotovappathu avangalum ippdithaan nakkal pannuvaangalo!!!

Wednesday, June 07, 2006

புனேயில் ஒரு மழைக்காலம்

இந்த ஒரு வார மழையில் பூனவின் அடயாளங்கள் கொஞ்ஜம் மாறித்தான்ப்போயிருக்கிறது..இல்லை தன் நிஜ அடயாளத்தை பெற்றிருக்கிறது.ஏனெனில் பூனாவில் மழைக்காலம் சற்று நீண்டதாக இருக்கும்(அருகில் உள்ள லோனாவாலா இந்தியாவின் அதிக மழை பொழிவைப் பெறும் இடங்களில் ஒன்று).

கடந்த இரண்டு மாதங்களாக சுட்டெரித்து overtime பார்த்து வந்த சூரியன் இப்போது ஓய்வில் இருக்கிறது.தூக்கம் கலைந்த பின்னும் போர்வைக்குள்ளிருந்து வர மறுக்கும் schoolபையன் போல காலை 10 மணிக்குக்கூட மேகத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு வெளியெ வர மறுக்கிறது. மாலை நேரம் குளிர்ச்௪¢யாக ரம்மியமானதாக இருக்கிறது.அவ்வேளைகளில் பால்கனியில் உட்கார்ந்துகொண்டு ,காப்பி குடித்துக்கொண்டே மழையை ரசித்தால்...கவிதயெல்லாம் எழுதத்தோணும்...பயப்படவேண்டாம்...கவிதயெல்லம் எழுதி பயமுறுத்த மாட்டேன்.மழயைப் பற்றிய(மனுஷ்ய புத்திரனின்) இந்த கவிதை எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்

குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்

கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை