Tuesday, January 05, 2010

Tuesday Teasers

# Grab your current read.
# Let the book fall open to a random page.
# Share with us few “teaser” sentences from that page.
# You also need to share the title of the book that you’re getting your “teaser” from … that way people can have some great book recommendations if they like the teaser you’ve given!
# Please avoid spoilers!

"குறிப்பிட்ட வடிவத்தில் அச்சாவதெல்லாம் கவிதை என்ற மாயை தகர்ந்த பிறகு
கவிதை அணுகுவதற்கும் கூடிய மட்டிலும் பகிர்ந்து கொள்வதற்கும் எளிதாகிறது.

கவிதையை நல்ல கவிதை கெட்ட கவிதை என்று பிரிக்க முடியாது, கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக் கொண்டுவிடுகிறது - அதனுடைய ஸ்திரமின்மையால், கண்ணை உறுத்தும் அழுத்தமான வண்ணங்களால், அனுபவ வறட்சியால், கூச்சல் போடுவதால், இன்னும் பிற அழிந்துபோன செயற்கையான வார்த்தைக் கூட்டங்களால். "
(பக்கம் எண்:221, ஆத்மாநாம் படைப்புகள், பதிப்பாசிரியர் பிரம்மராஜன்,காலசுவடு வெளியீடு)
அவ்வப்போது Tuesday Teasers பதிய முயற்சிக்கிறேன், முடிந்தால் செவ்வாய்கிழமைகளிலேயே!!

Sunday, January 03, 2010

புத்தகத் திருவிழா 2010




சிறுவயதில், தீபாவளிக்கு முதல்நாள் பங்கு பிரித்துக் தரப்படும் பட்டாசுகளைப் பார்க்கும் போது உண்டாகுமே, அதே போன்றதொரு உவகை நேற்று புத்தக சாலையிலிருந்து வாங்கிவந்த புத்தகங்களைப் பார்த்தபோது உண்டானது. பெரிதாக பட்டியல் எதுவும் தயாரித்துக்கொண்டு செல்லவில்லை. எனினும் வெவ்வேறு சமயங்களில், படிக்கவேண்டும்(Must Read) என்று மனது குறித்து வைத்திருந்த புத்தகங்களை பார்த்த மாத்திரத்தில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. இந்த வருடத்திற்கான புத்தக கோட்டா கிட்டத்தட்ட பூர்த்தியாகிவிட்டது. விடுபட்ட ஓரிரு புத்தகங்களை வாங்க அடுத்த வாரம் செல்ல வேண்டும். இனி புத்தகப் பட்டியல்..


1) India After Gandhi - Ramachandra Guha

இந்த வருடத்திற்குள் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தாலே என்னளவில் அது சாதனை தான். (900 பக்கங்கள்).


2) ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா

ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. சாவியில் அவர் எழுதிய கதைகளைத் தவிர்த்து மற்றவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன்.


3)அரசூர் வம்சம் - இரா.முருகன் (நாவல்)

இதற்கு வந்த விமர்சனக்கட்டுரைகளை படித்ததற்கு பதில் இந்த

புத்தகத்தைப் படிக்கத்துவங்கியிருந்தால், இவ்வளவு நேரம் பாதி புத்தகத்தைத் தாண்டியிருப்பேன். மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் நாவல்.


4) நவீனன் டைரி - நகுலன் (நாவல்)


5) நிழல்கள் - ஹரன் பிரசன்னா (கவிதைத்தொகுப்பு)

6) பேசாத பேச்செல்லாம் - ச.தமிழ்ச்செல்வன் (கட்டுரைகள்)

7) கிருஷ்ணா கிருஷ்ணா – இந்திரா பார்த்தசாரதி (நாவல்)

8) இடாகினி பேய்களும் – கோபி கிருஷ்ணன் (நாவல்)

9) அகி – முகுந்த் நாகராஜன் (கவிதைகள்)

10) நினைவோடை - அசோக மித்ரன் (27 கட்டுரைகள்)

11) காக்டெய்ல் – சுதேசமித்ரன் (நாவல்)

12) லண்டன் டைரி - இரா.முருகன் (பயணக்குறிப்புகள்)

13) பென்சில் படங்கள் – ஞானக்கூத்தன் (கவிதைகள்)

14) நாலு மூலை – ரா.கி.ரங்கராஜன் (கட்டுரைகள்).