Friday, May 19, 2006

வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு...

நேற்று தேசிகனின் வலைதளத்தை மேய்ந்து கொண்டிருந்தபோது,சுஜாதாவின் "வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு..." என்ற கட்டுரை கண்ணில் பட்டது.பழைய கட்டுரைதான்....சுஜாதாவின் மிகசிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இதைக்கூறலாம்.கட்டுரை அதிக ஜோடனைகள்,பாசாங்குகள் இல்லாமல் நேர்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது.இத்ற்குக்காரணம்...இது அவரது சொந்த அனுபவம் என்பதால் கூட இருக்கலாம்(அவரின் இரு மகன்களும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்).கட்டுரையின் இறுதியில் அவரே இதையும் குறிப்பிடுகிறார்.Project நிமித்தம் வெளிநாடு சென்று..விசா மாற்றி...கம்பெனி மாறி..அங்கேயே settle ஆகும் மென்பொருள் வல்லுநர்கள் பற்றி சொல்ல விட்டுவிட்டார்.இனி கட்டுரயிலிருந்து ஒரு பகுதி...

இன்றைய நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் விதிவிலக்கில்லாமல் ஒரு கஸினோ சித்தப்பாவோ அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கனவு தேசத்தின் அருமை பெருமைகளை வருடாந்திர விஜயத்தில் எடுத்துக் கூறி அந்த ஆசை சின்ன வயசிலிருந்து இ¬ளிர்களிடம் விதைக்கப்படுகிறது. அது நிறைவேறுவதற்கான தெளிவான பாதையும் தெரியும். ஜிஆர்ஈ, டோஃபெல் எழுதுவது, இருக்கிற எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் தலா எழுபது எண்பது டாலர் அனுப்பி - விண்ணப்ப பாரம் பெற்று நிரப்பி அனுப்புவது, அதில் ஏதாவது ஒரு கல்லூரி இடம் கொடுக்க… விசாவுக்கென்று பாங்க் பாஸ் புக்கில் தற்காலிகமாக கடன் வாங்கி எட்டு லட்சம் பத்து லட்சம் காட்டுவது, படித்து முடித்து அடுத்த ப்ளேனில் திரும்பி வந்துவிடுவேன் என்று விசா ஆபீஸரிடம் புளுகுவது, அதை அவர்களும் சிரித்துக்கொண்டே நம்புவது - இது ஆண்களுக்கு.
பெண்களுக்கு மற்றொரு பாதை உள்ளது. இங்கே, எம்.சி.ஏ, பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவை படித்து இந்துவில் விளம்பரம் கொடுக்கும் அமெரிக்க என்.ஆர்.ஐ. மாப்பிள்ளைகளுக்குப் பதில் போட்டு கல்யாணம் செய்துகொள்வது. அதன் க்ரீன்கார்டு சிக்கல்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. இவர்களுக்கு எல்லாம் என் அறிவுரை-தாராளமாக அமெரிக்கா செல்லுங்கள். உங்கள் திறமையும் புத்திசாலித்தனத்தையும் அங்கு சென்று பயன்படுத்திப் படிப்பதில் எந்தவித ஆட்சேபணையும் - யாருக்கும் இருக்கக்கூடாது. வாழ்த்துக்கள். இந்த தாத்தாவிடமிருந்து ஒரு டாட்டா! ஆனால், ஒரு வேண்டுகோள். அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-
1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தௌ¤¢வாக அறிந்து கொள்ளுங்கள்.
2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.
3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)
4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.
இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

முழு கட்டுரையையும் படிக்கவிரும்புபவர்கள் இங்கே க்ளிக்கவும்

நன்றி:தேசிகன்



13 comments:

Ms Congeniality said...

Good post!! Sujatha is 100% right!! And I hate this change in attitude. Ivlo pesaravanga anga sambaadhikardha inga develop panna use panlaam la?

பரத் said...

Yeah,they should!
you can type in tamil na?
have you seen my reply to your post
"Vote for Lok Paritran "?

Ms Congeniality said...

Actually tamil nalla padipen but when it comes to writing I am bound to make lot of mistakes. Hence I don't try.

And yes, its abt the news they've broken up right? I had gotten it thru' mail..was very disappointed :-(

Gopalan Ramasubbu said...

I read this Sujatha's article in Vikatans katrathum Petrathum when i was doing BE.As a person living and working abroad i can't agree with any of the 4 comments.It's highly generalised statement.

//தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள்//

infact, i talk to my friends in tamil who's in India but they prefer stylish english.:)

பரத் said...

ஆம்,இவை பொத்தம் பொதுவான statements.எல்லாருக்கும் பொருந்தாது.பெரும்பான்மையினருக்குப்பொருந்தும் என்பது என் கணிப்பு.

/*but they prefer stylish english.:)*/

உண்மை.....அங்கிருப்பவர்களைவிட..இங்கிருப்பவர்களுக்கு ஆங்கிலத்தின் மீதும் அந்த நாடுகளின் மீதும் மோகம் அதிகமாக இருக்கிறது.

Thanks for the comments

Maayaa said...

hey,
its nice post.. but i occur with gopalan.. and infact when i talk with people in tamil in india , they tend to ask " did u really go over there"

barath, recent 5 yrsla neraiya vishayangal maari irukku..

english scene vidra u.sla irukra makkal ippo kuranjunde varaanga..

but english thaan pesuvennu tamilnattu makkal maari irukaanga..infact indiala tamil avlo sumaara pesaraanga..ennaala nambave mudiyala..

inga u.sla, 90% of tamilians at my town talk ONLY in tamil..enake adhisayam dhaan

பரத் said...

/*infact indiala tamil avlo sumaara pesaraanga..*/
:-D
true..

/*90% of tamilians at my town talk ONLY in tamil..*/
itha kekkave...sorry padikkave romba sandhoshama irukku.

thanks for visiting my blog.

Syam said...

I agree with GR and Priya, inga irukum namma oor makkal not only tamil, you can count in other languages also,avanga avanga makkala paarkum pothu avanga mozhi la thaan pesuraanga, namma oor thaan peter thollai thaanga mudiyala....

பரத் said...

Nice to hear this...
but sujatha sonna first statemente ungalukku porunthum pola irukke???
hav you completed your 5 years over there?

அனுசுயா said...

வெளிநாட்டுக்கு போயிட்டா ப்ளாக் ஒன்னு ஆரம்பிச்சுட்டு அதுல தங்கிலீஷ்ல எழுத ஆரம்பிச்சுடுவாங்க.
சுஜாதா அவர் கட்டுரையில இப்ப சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான பாயிண்ட் இதுதான். ‍:)

பரத் said...
This comment has been removed by a blog administrator.
பரத் said...
This comment has been removed by a blog administrator.
பரத் said...

ha..ha..
100% unnmai...