Friday, August 10, 2007

ஹி ..ஹி...

ஒரு டெலி போன் சம்பாஷனை

"ஹலோ"

"ஹலோ"

"யார் பேசறது?"

"நான் தான்"

"நான் தான்னா யார்?"

"நான் தான் ரேவதி"

"ரேவதி! அப்பா இல்லையா?"

"இல்லை"

"அம்மா"

"இல்லை"

"சரி அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்கிறாயா?"

"யாரு?"

"ராமன்.எழுதிக்கோ ரா - ம - ன் "

"ரா எப்படி எழுதறது?"

"சரிதான்! பாப்பா , வீட்ல வேற ஒருத்தரும் இல்லையா?"

"சேகர் இருக்கான்"

"சரி சேகரைக் கூப்பிடு"

"சேகர் இந்தா" என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்...


- சுஜாதா

5 comments:

வவ்வால் said...

ஹி ..ஹி .. ஹி

பரத் said...

வவ்வால் ,
:)))
முதல் வருகைக்கு நன்றி.

Anonymous said...

Good one.

பழூர் கார்த்தி said...

நல்ல கதை, இதை சுஜாதா எப்போ எழுதினார்??

<<>>

அப்புறம், உங்கள் விளக்கமான பின்னூட்டகளை எனது பதிவில் படித்தேன், மகிழ்ச்சி, நீங்கள் ஏதாவது திருச்சி பற்றி எழுதியிருக்கிறீர்களா?

பரத் said...

கார்திக்,
அவர் இந்தக்கதையை நீர்க்குமிழி என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
திருச்சி பற்றி எதுவும் எழுதவில்லை.புனே பற்றி எழுதும் எண்ணமுண்டு

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி