Thursday, July 26, 2007

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் ஓஷோ-எனது நிலைப்பாடுகள்





அய்யனார் தமது பதிவில் குறிப்பிடிருப்பது போல,ஓஷோவின் தியான முறைகள் யாவும் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு உலக அளவில் பெரும் வெற்றி கண்டவை.கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓஷோ ஆசிரமதிற்கு வருவோரின் எண்ணிக்கை இருமடங்காகப் பெருகியுள்ளது.

ஆனால்...

ஓஷோ மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவரா..Medium தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டவரா என்பதை அறிய கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பதும் அவசியமாகிறது.


* ஓஷோ என்ற தனி நபருக்கு 93 Rolls-Royce கார்கள் சொந்தமாக இருந்திருக்கின்றன.அதுபோக விலைஉயர்ந்த கற்கள் பதிக்கப் பட்ட ladies watch களின் தொகுப்பும் உண்டு.
"My religion is the only religion." என்று பெருமையாகக் குறிப்பிடும் ஓஷோவிற்கு எளிமையை போதிக்காத எந்த மதமும் நிலைத்திருக்கமுடியாது என்பது புரியாமல் போனது ஏனோ?

(1985ல் immigration fraud காரணமாக கைதாகி கார்கள் ,சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டு நாடுகடத்தப்பட்டார்.பார்க்க படம்)








* 20ம் நூற்றாண்டி அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரே ஒரு Bio-Terror attack ஓஷோ பக்தர்களால் நிகழ்த்தப்பட்டது.ஓஷோ அமெரிக்காவில் ஆசிரமமைத்துத் தங்கியிருந்தபோது,அவரது மடத்தில் இருந்த சன்யாசிகள் அருகில் இருந்த ஹோட்டல்களில் மித அபாய விஷத்தைக் கலந்துள்ளனர்.உணவை உண்ட 700க்கும் அதிகமானோர் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளனர்(உயிரிழப்பில்லை).

இவை ஓஷோ சொல்லித்தான் செய்யப்பட்டது என்று சொல்லவில்லை.ஆனால் 'அடுத்த உயிர்களுக்கு தீங்கு விளைவிப்பது தவறு'என்கிறஆதார தத்துவத்தைக் கூட சீடர்களுக்கு விளங்கவைக்காதது தவறில்லயா?


* அவரது பல நல்ல கருத்துக்களை விட்டு விட்டு செக்ஸ் பற்றியவற்றை மட்டும் பிடித்துக்கொண்டு "செக்ஸ் சாமியார்" என்று முத்திரை குத்துவது தவறு.அதே சமயம் "Open Sex" பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் ஆகாது இல்லயா?தியானம் மட்டும் செய்ய வருகிறார்கள் என்றால் அங்கு சேருவதற்கு கட்டாய HIV Test ஏனோ?அருகில் அமர்ந்து தியானம் செய்வதால் எய்ட்ஸ் பரவுமா?

துவக்கத்தில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில்(அனுமதிக்கப்பட்ட அளவு) வாலியமும்,நைட்ரஸ் ஆக்ஸைடும் உட்கொள்ளத் துவங்கி பின் அதுவே எல்லை மீறிஅதற்கு அடிமையும் ஆனார்.பின்"Actually oxygen and nitrogen are basic elements of existence. They can be of much use, but for reasons the politicians have been against chemicals of all kinds, all drugs." என்று சொல்லுமளவிற்கு போனது இப்பதிவிற்கு சம்பந்தமில்லாதது என்பதால் விட்டு விடுவோம்.


இன்றைய நவயுக சாமியார்கள் யாவரும் ஓஷோவின் கருத்துக்களை பயன்படுத்துகிறார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.சிலர் ஒத்துக் கொள்கிறார்கள்.சிலர் அப்படிச் செய்வதில்லை.அதிருஷ்ட வசமாக ஓஷோவும் முதல் வகையினரிலேயே சேர்கிறார்.அதாவதுஓஷோ அதிக அளவில் சரதுஸ்திராவின் கருத்துக்களை ப்ரதிபலிக்கிறார்.பல இடங்களில் புத்தரின் கருத்துக்களை மேற்கோள் காட்டுகிறார்.அதனால் அவர்களை இவர் காப்பி அடிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?ஓஷோ சரதுஸ்ராவின் கருத்துக்களை காப்பியடிக்கிறார் என்பது அவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் மற்றவர்கள் அவரைக் காப்பியடிக்கிறார்கள் என்பதும்.

"No Saint comes to the world with a new teaching or philosophy;
he brings the same ancient wisdom"
என்பதுதான் உண்மை.
சரதுஸ்த்ரா,ஓஷோ உருவ ஒற்றுமை



ஓஷோ ஒரு சிறந்த சிந்தனாவாதி.அவரது புத்தகங்கள் போற்றப் படவேண்டியவை,தியான முறைகள் கொண்டாடப் பட வேண்டியவை.மற்றபடி அவர் சர்வ பலவீனங்களும் கொண்ட சாதாரணர்.என்னைக் கேட்டால் ரெண்டு அவுன்ஸ் எக்ஸ்ட்ரா சாதாரணர்.எல்லா சாமியார்களைப் போல அவரது வீழ்ச்சியும் தனிமனிதத் துதியை ஆதரிப்பதில் தான் துவங்கியது.

"Rich men's Guru" என்று செல்லமாக அழைக்கப்படும் ஓஷோ சமூகத்தில் அடைந்திருக்கும் இந்த பிம்பம் சரியானதா,தவறானதா என்று தெரியவில்லை.ஆனால் போதுமானது என்றே தோன்றுகிறது.

"OSHO. Never Born, Never Died.
Only Visited this Planet Earth between Dec 11 1931 – Jan 19 1990"

தலைமயிர் நீளமாக வைத்துக் கொண்டு,ஒரு கையில் சிகரட்டும் மறுகையில் கேர்ல் பிரண்டுமாக கொரேகான் பார்க்கில்(புனே) திரியும் வெளி நாட்டவரை வேண்டுமானால் இந்த சினிமாத்தனமான வசனங்கள் கவரலாம்.
நம்மள இல்லீங்கோ!!!!

6 comments:

Anonymous said...

good one!

Anonymous said...

20ம் நூற்றாண்டி அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரே ஒரு Bio-Terror attack ஓஷோ பக்தர்களால் நிகழ்த்தப்பட்டது.ஓஷோ அமெரிக்காவில் ஆசிரமமைத்துத் தங்கியிருந்தபோது,அவரது மடத்தில் இருந்த சன்யாசிகள் அருகில் இருந்த ஹோட்டல்களில் மித அபாய விஷத்தைக் கலந்துள்ளனர்.உணவை உண்ட 700க்கும் அதிகமானோர் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளனர்(உயிரிழப்பில்லை). //

President Ronald Reagan நெய்த வலையல்லவா இது. உங்களுக்கு ஏன் அன்பரே அது. இந்தியாவிலிருந்து வந்த ஒரு இமிக்கிரண்ட் ஒரு புது மதமே அமைத்து ஒரு அமெரிக்கா மாநிலத்தின் செனேட்டாராக ஆகும் அளவிற்கு வளர்ந்தால், தன் மதத்தை பரப்ப இரத்தம் சொட்ட சொட்ட ஒவ்வொரு கண்டமாக சென்று நாடு பிடித்தவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.

யோசித்துப் பாருங்கள். அகப்பட்டால் ஒசோவின் Autobiography வாங்கி வாசியிங்கள். உங்களுக்கு என்ன வயதிற்கும்? இன்னும் வளர வேண்டி நிறைய இடம் இருக்கிறது என்பது இந்த பதிவின் மூலமாக தெரிவித்து விட்டீர்கள்.

Anonymous said...

ஒழுக்கம் அற்றவை
ஒழிவது உத்தமம்.

Unknown said...

மிக மிக தெளிவான சிந்தனை.... வாழ்துக்கள்.....

சின்ன குறை.... நீங்களும் அவரை ஆன்மீக வாதி என்ற பார்வையில் எழுதியுள்ளீர்கள்....அவர் ஒரு அரசியல்வாதி என்பதே நிஜம்....

But there is lot to be leant from him..... he is really intelligent man.... his book can be read.... when one read all of his books, he gets clear idea about him.... when one goes to his ashram, and get personal experice , he will come out from his maya....

these people definitely misunderstood him as great guru....

பரத் said...

அனானி,

நன்றி.

உண்மை விரும்பி,

//ஒரு இமிக்கிரண்ட் ஒரு புது மதமே அமைத்து ஒரு அமெரிக்கா மாநிலத்தின் செனேட்டாராக ஆகும் அளவிற்கு வளர்ந்தால், //
உண்மைதான்.டாலஸ் நகரில் நடந்த உள்ளூர் தேர்தலில் தங்கள் பிரதிநிதி(ஆசிரம வாசி) வெல்ல,உள்ளூர் மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது அவசியமாயிருந்திருக்கிறது.அதனால் மடத்தின் மூத்த தலைவி ஷீலா மாதாஜியின் மூலம் திறமையாக நடத்தப் பட்டிருக்கிறது.(மாதாஜியின் லீலைகள் தனிப்பதிவு போடுமளவுக்கு சுவாரஸியமானவை)

ரீகன் ,உள்ளூர் மக்களின் உயிருடன் விளையாடிதான் வலை பின்ன வேண்டுமா? வலை பின்ன முடிவெடுத்துவிட்டால் அவர்களுக்கு வேறு சங்கதிகளா கிடைக்காது?

மேலும் இப்படி விஷத்தைக் கலப்பது மாதாஜிக்கு கைவந்த கலையாம்.ஆசிரமத்துக்குள்ளும் பலமுறை இதனை பரிட்சித்துப் பார்த்திருக்கிறார்.
விஷம் கலந்தது முதல் உள்ளூர் மக்களை அடிக்கடி தாக்கியது வரை அனைத்தையும் செய்ததுஆசிரம வாசிகள்தான் என்று ஓஷொ தமது வாயால் அவரது அதிகாரப் பூர்வமான தளத்தில்(osho world) ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் :)

//அகப்பட்டால் ஒசோவின் Autobiography வாங்கி வாசியிங்கள்.//
எத்தனை சுயசரிதங்களில் உண்மையான உண்மை வெளிப்பட்டிருக்கிறது? எல்லாம் வசதியான உண்மைகள்தானே! யாரேனும் நடுநிலையாளர்கள் எழுதிய புத்தகம் தெரிந்தால் குறிப்பிடுங்கள்.கட்டாயம் படிக்கிறேன்.

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

அனானி,
உண்மை

ரவி,
முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி
தொடர்ந்து உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

butterfly Surya said...

இந்த நூற்றாண்டின் இணையற்ற குரு.. ஓஷோ..

மொத்தம் படித்துவிட்டு பிறகு விமர்சியுங்கள்..

Yes.. Still he is wrongly understood.. from you too..

Surya
Dubai