Saturday, June 27, 2009

32 கேள்விகள் - மீம்



1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பெற்றோர் வைத்த பெயர் தான். எனக்கு என் பெயர் பிடிக்கும்.மேலும் வேறு எழுத்தாளர்கள் யாரும் இந்தப் பெயரில் இல்லாததால் எனது எழுத்துலக வாழ்க்கைக்கும் இதே பெயரையே....(சரி சரி..இதுக்கே அசந்துட்டா எப்படி!! இன்னும் நுப்பத்திரெண்டு கேள்விகள் இருக்கே!)


2. கடைசியாக அழுதது எப்போ?

சில நாட்களுக்கு முன்பு, வெங்காயம் நறுக்கும் போது.


3. உங்களுக்கு உங்க கையெழுத்துப் பிடிக்குமா?
சில சமயங்களில். என் கையெழுத்து என் மனம் போல அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். செக்கில் கையெழுத்து போடக் கூட இரண்டு நிமிடம் வெயிடீஸ் விட்டு பழகி, பின்தான் போடுவேன்.


4. பிடித்த மதிய உணவு?
பருப்பு சாதம் , வெண்டைக்காய் கறி. புனேவில் சென்று தென்னிந்திய உணவு கிடைக்காமல் திண்டாடிய போதும் இதுதான் வேறு ரூபத்தில் வந்து கை கொடுத்தது. தால் ச்சாவல், பிண்டி பாஜி.



5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

உங்களையே உங்களுக்குப் பிடிக்குமான்னு பின் நவீனத்துவ முறையில் கேட்கிறீர்கள். பிடிக்கும்..அதாவது நட்பு வைத்துக்கொள்வேன்.



6. கடலில் குளிக்கப் பிடிக்குமா, அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
அருவியில்


7. ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முதலில் பேச்சை, பின்னர் பேச்சுக்கும் செயலுக்குமுள்ள தொடர்பை


8.உங்க கிட்ட உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம் - இரக்ககுணம்,adaptability,உழைப்பு
பிடிக்காதவிஷயம் - அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கருதி சுயவிருப்பத்தினை தெரிவிக்காமல் விட்டுவிடுவது.


9. உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்? 31. கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
மணம் ஆகவில்லை.

10. இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
பெற்றோர் பக்கத்துல இல்லாததற்கு.


11. இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
(காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு போல வாசிக்கவும்) பதிவை எழுதிய அன்று இவர் வெள்ளை நிறத்தில் மேலாடையும், பழுப்பு நிறத்தில் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார். இவரைப் பற்றிய தகவல் அறிந்தால் தொடர்புகொள்ள வேண்டிய........


12. என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
P.B.ஸ்ரீநிவாஸ் பாடல்கள்



13.வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
நீலம்.(அய்யா ராசா...யாருய்யா இப்படியெல்லாம் ரூம் போட்டு கெள்விகளை யோசிச்சது??)

14. பிடித்த மணம்?
புது புத்தகத்திலிருந்த்து வரும் மணம், புது காப்பிப்பொடியின் மணம், மல்லிகைப்பூ மணம்.


15. நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
நானே ரொம்ப காலதாமதமாகத்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.எனினும் அழைக்கவிரும்பும் நபர் ப்ரகாஷ். இவரது சுவாரஸியமான எழுத்துநடையும் அதில் தெறிக்கும் நகைச்சுவையும் பிடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் இவர் பதிவெழுதுவதில்லை. என்ன கேட்டாலும் 140 எழுத்துகளுக்குள்ளாகவே பதில்
சொல்கிறார்
. இவர் எழுதினால் மகிழ்வேன்.


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
இவர் அவ்வப்போது பார்த்த சினிமா பற்றி எழுதுகிற குறிப்புகள் பிடிக்கும். கதைகள்ள உடனே நியாபகத்துக்கு வருவது கமிஷன் மண்டி சுப்பையா. வெட்டியா மொக்கைபதிவுகள் போடாம சிறுகதை எழுதுவதில் தீவிரமா இருக்கறது பிடிக்கும்.

18.பிடித்த விளையாட்டு?
பிடித்த அல்ல பீடித்த விளையாட்டு கிரிக்கெட்.


19. கண்ணாடி அணிபவரா?
இன்னமும் இல்லை.


20. எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
எல்லாவகைப் படங்களும் என்றாலும் எதார்த்தமான படங்கள் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும்.


21. கடைசியாகப் பார்த்த படம்?
Hangover. நகைச்சுவைப் படம், பிடித்திருந்தது.


22. என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
"பூமியின் பாதி வயது" - அ.முத்துலிங்கம் அவர்களின் அனுபவக் கட்டுரைகள்.


23. உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
கணக்கு வைத்துக்கொள்வதில்லை.


24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடிக்காத சத்தம் - வெடி சத்தம்.
பிடித்த சத்தம் - வெடி சத்தம்..நான் பற்றவைக்கும் போது மட்டும்(சும்மா அதிருதில்ல!!)


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இதோ இங்கே..ஆக்ஸ்ஃபோர்ட்,இங்கிலாந்து.

26.உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
ஓ இருக்கிறதே! அபார ஞாபக சக்தி உண்டு. உதாரணாமா , இருபத்தாறு வருடங்களுக்கு முன்னால் எனக்கு வைத்த பெயரை இன்னமும் யார் கேட்டாலும் சரியாக சொல்லிவிடுகிறேன்.(அய்யோ, அடிக்க வராதிங்க..இது சொந்த மொக்கை இல்ல. கல்கி ஒருமுறை சொன்னது)


27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அடக்குமுறை மற்றும் அடங்குமுறை

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சாத்தான்களுக்கா பஞ்சம்? சாத்தானுக்குள் இருக்கும் என்னை அல்லவா தேடிக்கொண்டு இருக்கிறேன்.(நோட்பண்ணுங்கப்பா..நோட்பண்ணுங்கப்பா)

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
மூணாரு

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே..அப்படின்னு சொன்னா அது உடான்ஸ். இன்னும் கொஞ்சம் சந்தோஷமா, சுத்தி இருக்கறவங்களையும் சந்தோஷமா வச்சிருக்கணும்.


32. வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
(கொஞ்சம் நீளமான வரி)
Reverence for Life affords me my fundamental principle of morality, namely, that good consists in maintaining, assisting, and enhancing life and that to destroy, harm, or to hinder life is evil and the affirmation of the world ,that is affirmation of the will to live, which appears in phenomenal forms all around me -- is only possible for me in that I give myself out for other life -(Albert Schweitzer)

Life Quotes அப்படின்னு கூளில் தேடி, பொறுக்கினதாக்கும். லேசில் புரியாது....வாழ்க்கையைப் போலவே.....


விளையாட்டிற்கு அழைத்தமைக்கு நன்றிகள் ஸ்ரீதர்


2 comments:

Sridhar V said...

//....(சரி சரி..இதுக்கே அசந்துட்டா எப்படி!! இன்னும் நுப்பத்திரெண்டு கேள்விகள் இருக்கே!)
//

எண்ணி எண்ணிப் பாத்தேன். இதுக்கப்புறம் நுப்பத்தியொண்ணுதாண்ணே இருந்தது. அந்த இன்னொரு கேள்வி எங்கண்ணே?

//வெட்டியா மொக்கைபதிவுகள் போடாம சிறுகதை எழுதுவதில் //

வெட்டியா மொக்கை பதிவுகள் போடாம

வெட்டியா மொக்கை சிறுகதைகள் எழுதறேன்னு சொல்ற உங்க நுண்ணரசியல் கண்டு பிரமித்து... சரி! சரி! ஒரு காமெடிக்குத்தான் :))

தொடர்ந்து விளையாடியதற்கு நன்றிங்க்ணா. ஐகாரஸ் ஐயாவை கூப்பிட்டிருக்கீங்க. அவர் மீம் தொடங்கிதான் வைப்பேன் முடிக்கல்லாம் வரமாட்டேன்னு அடம்பிடிப்பார் பாருங்க :))

பரத் said...

//இதுக்கப்புறம் நுப்பத்தியொண்ணுதாண்ணே இருந்தது. //
மீ த ஸ்பெல்லிங் மிஷ்டேக் ;)
வருகைக்கு நன்றி !!