Friday, May 19, 2006

வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு...

நேற்று தேசிகனின் வலைதளத்தை மேய்ந்து கொண்டிருந்தபோது,சுஜாதாவின் "வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு..." என்ற கட்டுரை கண்ணில் பட்டது.பழைய கட்டுரைதான்....சுஜாதாவின் மிகசிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இதைக்கூறலாம்.கட்டுரை அதிக ஜோடனைகள்,பாசாங்குகள் இல்லாமல் நேர்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது.இத்ற்குக்காரணம்...இது அவரது சொந்த அனுபவம் என்பதால் கூட இருக்கலாம்(அவரின் இரு மகன்களும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்).கட்டுரையின் இறுதியில் அவரே இதையும் குறிப்பிடுகிறார்.Project நிமித்தம் வெளிநாடு சென்று..விசா மாற்றி...கம்பெனி மாறி..அங்கேயே settle ஆகும் மென்பொருள் வல்லுநர்கள் பற்றி சொல்ல விட்டுவிட்டார்.இனி கட்டுரயிலிருந்து ஒரு பகுதி...

இன்றைய நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் விதிவிலக்கில்லாமல் ஒரு கஸினோ சித்தப்பாவோ அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கனவு தேசத்தின் அருமை பெருமைகளை வருடாந்திர விஜயத்தில் எடுத்துக் கூறி அந்த ஆசை சின்ன வயசிலிருந்து இ¬ளிர்களிடம் விதைக்கப்படுகிறது. அது நிறைவேறுவதற்கான தெளிவான பாதையும் தெரியும். ஜிஆர்ஈ, டோஃபெல் எழுதுவது, இருக்கிற எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் தலா எழுபது எண்பது டாலர் அனுப்பி - விண்ணப்ப பாரம் பெற்று நிரப்பி அனுப்புவது, அதில் ஏதாவது ஒரு கல்லூரி இடம் கொடுக்க… விசாவுக்கென்று பாங்க் பாஸ் புக்கில் தற்காலிகமாக கடன் வாங்கி எட்டு லட்சம் பத்து லட்சம் காட்டுவது, படித்து முடித்து அடுத்த ப்ளேனில் திரும்பி வந்துவிடுவேன் என்று விசா ஆபீஸரிடம் புளுகுவது, அதை அவர்களும் சிரித்துக்கொண்டே நம்புவது - இது ஆண்களுக்கு.
பெண்களுக்கு மற்றொரு பாதை உள்ளது. இங்கே, எம்.சி.ஏ, பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவை படித்து இந்துவில் விளம்பரம் கொடுக்கும் அமெரிக்க என்.ஆர்.ஐ. மாப்பிள்ளைகளுக்குப் பதில் போட்டு கல்யாணம் செய்துகொள்வது. அதன் க்ரீன்கார்டு சிக்கல்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. இவர்களுக்கு எல்லாம் என் அறிவுரை-தாராளமாக அமெரிக்கா செல்லுங்கள். உங்கள் திறமையும் புத்திசாலித்தனத்தையும் அங்கு சென்று பயன்படுத்திப் படிப்பதில் எந்தவித ஆட்சேபணையும் - யாருக்கும் இருக்கக்கூடாது. வாழ்த்துக்கள். இந்த தாத்தாவிடமிருந்து ஒரு டாட்டா! ஆனால், ஒரு வேண்டுகோள். அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-
1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தௌ¤¢வாக அறிந்து கொள்ளுங்கள்.
2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.
3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)
4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.
இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

முழு கட்டுரையையும் படிக்கவிரும்புபவர்கள் இங்கே க்ளிக்கவும்

நன்றி:தேசிகன்



Thursday, May 04, 2006

கண்டிப்பா பயப்படணும் (அல்லது) பயப்படுவது மிகவும் அவசியம்



தலைப்பைப் பார்த்துக் குழம்ப வேண்டாம்."டர் நா ஸரூரி ஹை" படத்தோட Translation தான் அது.எப்டி கலக்கறோமா! சரி மேட்டருக்கு வருவோம்.கடந்த வாரம் மேற்சொன்ன இந்த (அபத்தமான)படத்தை பார்க்க நேர்ந்தது.படத்தின் 6 கதைகளையும் 6 வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.ராம் கோபால்வர்மாவின் கற்பனை கிணரு வற்றிவிட்டது போலும்..குமுததில் வரும் ஒருபக்கக்கதை போல 6 கதைகளை சேர்த்து முழு நீள படமொன்றை எடுத்துவிட்டார்.இதுபோல கதைகளை சேர்த்து எடுப்பது நல்ல உத்தி தான் என்றாலும் தேர்ந்தெடுத்த கதைகள் எல்லாம் பழசு, நாம் ஏற்கனவே அறிந்தது.அதனால் சுவாரசியம் ஏற்படவில்லை.
6 கதைகளில் அர்ஜுன் ராம்பால் வரும் கதை மட்டும் தேறுகிறது..அமிதாப் பச்சனை வீணடித்திருக்கிறார்கள்.
வழக்கம் போல பயமுறுத்துவதற்கு இந்த படத்திலும்இசையை தான் நம்பியிருக்கிறார்.இசையமைப்பாளரும் வாங்கிய காசுக்கு நன்றாக அடித்திருக்கிறார்.
ஒரு விஷயம் ஆச்சரியமாக இருந்தது....அமிதாப் திரையில் தோன்றும் முதல் காட்சியில்,திரையரங்கில் யாருமே கைதட்டவில்லை...அட ஒரு விசில் கூட இல்லை.இதற்கும் படம் ரிலீஸான இரண்டாம் நாள் சென்றுள்ளேன்.வட இந்தியாவின் Super starக்கே இந்த நிலமைதான்.காரணம்...

1)வட இந்தியர்கள் நம்மைப்போல் சினிமாகாரர்களை கொண்டாடுவதில்லை.சினிமாவை சினிமாவாகப்பார்கிறார்கள்.
2)ரிலீஸாகும் 75% படஙளில் அமிதாப் இருக்கிறார்.

(Assistant Dir:சார்,இந்த படத்தில் அமிதாப் பண்ற மாதிரி ரோல் ஒண்ணுமில்லை.
Director:அப்டீன்னா..ஒரு சீன்ல மட்டும் வர்ற அந்த Post man characterஐ பண்ண சொல்லு.)
Default actor!!

படத்தின் முதல் காட்சியில் ,ஒருவர் "டர் னா மான ஹை" பார்த்துவிட்டு தியேட்டர் காரரிடம் சென்று ராம்கோபால் வர்மாவின் address கேட்பார்.தியேட்டர் காரர் எதற்கெனக்கேட்பார்.அத்ற்கு இந்த முதல் ஆசாமி காசை திருப்பி வாஙணும் என்பார்.
படம் முடிந்து வெளியெ வரும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

Tuesday, May 02, 2006

நூறாவது நாள்



வெற்றிகரமான நூறாவது நாள்!
நான் புனே வந்து இன்றோடு 100 நாட்கள் ஆகின்றது.

Saturday, April 29, 2006

படித்ததில் பிடித்தது(1)

உன் பார்வைகள்
-----------------
காயங்களுடன் கதறலுடன்
ஓடி ஒளியுமொரு பன்றியைத்
துரத்திக் கொத்தும்
பசியற்ற காக்கைகள்
உன் பார்வைகள்
-கலாப்ரியா

ஒற்றை 'பூ'
----------------
தண்டவாளத்தில்
தலைசாய்ந்து கிடக்கும்
ஒற்றைப் பூ
நான்.

நீ
நடந்து வருகிறாயா?
இரயிலில் வருகிறாயா?

-பழனி பாரதி


ஒரு புள்ளியில்
-----------------
இனி பார்க்க
வேண்டும் என்கிற
ஆசைவருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப்
பார்த்துக் கொள்ளலாம்

எங்காவது
ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக்
கொள்ளட்டுமே

-அறிவு மதி


Thursday, April 20, 2006

அன்பே சிவம்


கடந்த வாரம்,அன்பே சிவம் படத்தை மீண்டும்(6வது முறையாக) பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.கமலின் எல்லா படஙளும் எனக்கு பிடிக்கும் என்றாலும்,இந்த படம் எனக்கு மிகப் பிடித்த (டாப் டென்) படங்களில் ஒன்று.
அண்மையில் கம்யூனிசம் பற்றி பேசும் எந்த தமிழ்படமும் வந்ததாக நினைவிலை.எந்த முன்னனி ஹீரோவும் ஏற்க தயங்கும் விகாரமான ரோலில் கமல் பின்னியெடுத்திருப்பார்.படதின் ஹைலைட்டே கமலுக்கும் மாதவனுக்கும் நடக்கும் conversations தான்(வசனம்:மதன்).
கமலுக்கு இணையான ரோல் மதவனுக்கு.மேடி கலக்கியிருப்பார். கமலின் இம்சை தாங்க முடியாமல் Give me a break man என புலம்புவது அழகு.freek out!
இந்தப் படத்தில் கமலின் நரம்புகள் கூட நடித்திருக்கும்.பெரிய சோடாபுட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு..ஒருமாதிரி இழுத்து,இழுத்து பேசுவார்.இதை படம் முழுவதும் ஒரேமாதிரியாக செய்திருப்பார்.gr8! (Flash backil அழகான கமலை ரசிக்கலாம்).
பாடல்களும் இப்படத்திற்கு plus(இசை விதயாசாகர்).குறிப்பக மது பாலகிருஷ்ணன் பாடிய "பூவாசம் புறப்படும் பெண்ணே" பாடல் அருமையாக இருக்கும்.படத்தில் சேர்க்கப்படாத SPB பாடல் ஒன்று இருக்கிறது."மெளனமே"எனத்துவங்கும் அப்பாடல் அக்மார்க் SPB மெலடி.
ஐந்தே நிமிடஙள் வந்தாலும் யூ.கி.சேது பட்டையை கிளப்பியிருப்பார்.
குறையே இல்லை என்று சொல்லமுடியாது.ஹீரோ வில்லன் மகளைக் காதலிப்பது,ஹீரொ 10 பேரை தனி ஆளாக நின்று பந்தாடுவது போன்ற தமிழ்படதுக்கே உரிய அபத்தங்கள் இதிலும் உண்டு.அதையெல்லாம் தாண்டி இப்படம் ஒரு வித்யாசமன முயற்சி.


கடைசிக்காட்சியில்,சந்தான பாரதி கமலை கொல்வதற்காக வந்துவிட்டு மனம் திருந்தி கொல்லாமல் விட்டுவிடுவார்.பின்பு கமலிடம்"திரும்பி வந்து என் பொழப்பில் மண்ணள்ளி போட்றாதீங்க "என்பார்.அதற்கு கமல் "பொழப்ப கெடுக்கமாட்டேன்..பொழச்சு போங்க " என்று சொல்லி சிரிப்பாரே.....Class

பி.கு:கமல் இந்த படத்திற்காக செலவழித்தது 12 கோடி.திரும்பக் கிடைத்தது 7கோடி


Tuesday, April 18, 2006

துக்கடா Post


- தலைவர்(அதாம்பா கமல் ஹாசன்) நடித்த,இயக்கிய,தயாரித்த,பாடிய...படங்களின் முழு பட்டியல்(வருடம் வாரியாக)இங்கு கிடைக்கிறது.

-பூனாவில் தமிழர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.இங்கு நம்மாட்கள் பஜனைமடம்ஒன்றை நடத்தி வருகிறார்கள்.வரும் 30ஆம் தேதி இங்கு 'சீதா கல்யாணம்' நடைபெறவிறுக்கிறது.போகலாமென்றிருக்கிறேன்.(மனசாட்சி: டாய் அன்னதானம் இருக்குன்னுதான போற!!)

-சமீபத்தில் படித்த கவிதைகளில் பிடித்தது

ட போல் மடங்கி கம்பளிப்பூச்சி
மூன்றாம் படியில் ஏறக்கண்டு
புறப்பட்டக் காலை ஒன்றாய் சேர்த்து
உற்றுப் பார்த்தேன்

அழகே நகரும்
அற்புதம் வியந்து
செருப்பைப் போட்டேன்

இரண்டாம் படியில் ஏறியபோது
நசுங்கும்படியாய்
வசமாய் மிதித்து
நடன்ந்தேன் வெளியே
ஒன்றாம் படியோ
நிகழ்ந்ததைக் கண்டு
திடுக்கிட்டிருக்க.


-கல்யாண்ஜி



கவிதை உபயம்:ப்ரசன்னா


Monday, April 17, 2006

thalaippu onnum thonala...

I made a list of books which i really wanted to read in my collage days.
That time I couldn't buy the books ...bcoz my "manasaatshi" was warning me
(magane, subjecta padichu,arrearsa mudhalla clear pannu..appuram
ithellam padikkalaam!).But now Im a freebird!Here are the books..

(1)Eppothum Penn -Sujatha

(2)Kaakidha Malargal -Adhavan

(3)18-avdhu Atchakkodu -Asoka Mithran

(4)Vishnu Puram -Jeyamohan

(5)Abithaa -La.sa.ra

(6)Thernthedukkappatta -Sujatha
sirukathaiga

(7)Natpukkaalam -Arivumathi

(8)ponniyin selvan -kalki(Eventhough Im notinterested in historical novels,I want to read this one)

(9)Auto-biography -Kushwant singh

(10)GodFather -Mario Puzo(Appdithaan nenaikkren)

(11)Da Vinci Code -Dan Brown(padikka Aarambichtomla!!)

.............Valarum
(manasaatshi:vairamuthu style???ithu romba over).
I hope ,I will get it one by one.

Monday, April 03, 2006

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா....



நான் பூனா வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.முன்பு இருந்ததை விட இப்போது என் ஹிந்தி அறிவு மேம்பட்டிருப்பதென்னவோ உண்மை தான்.ஆட்டோகாரர்களிடம் பேரம் பேசுமளவிற்கு கற்றுக்கொண்டுவிட்டேன்.எனினும் எனக்கு தெரிந்த மொத்த ஹிந்தி வார்தைகளையும் ஒரு ரயில்டிக்கெட்டின் பின்புறம் எழுதி விடலாம்.அவ்வளவுதான்.

ஊருக்கு வந்த புதிதில் சற்று கஷ்டமாக இருந்தது. நான் பிட்டடித்து பாஸ் செய்த 'பிராத்மிக்' பரீட்ஷை எந்த விதத்திலும் உதவவில்லை.ஹிந்தி தெரியாமல் பூனாவில் காலம் தள்ளுவதென்பது கொஞ்சம் கடினம்தான். இங்குள்ள மலயாளிகளும்,கொல்டிகளும் நன்றாக ஹிந்தி பேசுகிறார்கள்,காரணம் அவர்களது பாடதிட்டதில் ஹிந்தி கட்டாய பாடமாகவுள்ளது.ஆனால் நம் நாட்டில்,அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபதிற்காக நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டதின் விளைவு...என்னை போன்றோர் கஷ்டப்பட்டுக்கொண்டிருகிறோம்.இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் அந்த அரசியல்வாதிகளின் பேரன்களும் பேத்திகளும் ஹிந்தியை(கட்டாய பாடமாக)
படித்துக்கொண்டிருக்கிறார்களாம்.ஸாலா......

Sunday, April 02, 2006

முதல் பதிவு

வணக்கம்
பெயர்க்காரணம்:தென்றல் வந்து தீண்டும்போது...என்ற இந்தப்பாடல் எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் ஒன்று.இப்பாடலில் இளையராஜாவின் இசை தென்றலைப்போல நம்மை தீண்டிச்செல்வது உண்மை.

நான் இந்த வலைப்பதிவை தொடங்கியதற்கு முக்கிய காரணம்,அடுத்தவர்களின் பதிவுகளுக்கு comment எழுத எனக்கு ஒரு id வேண்டும் என்பதுதான்.என் தமிழறிவை போதிய அளவு வளர்த்துக்கொண்டபின் சொந்தமாக நிறைய எழுதலாமென இருக்கிறேன்.அதுவரை..........

நான் படித்து ரசித்த விஷயங்களை வேறு தளங்களிலிருந்து எடுத்து(அதாவது சுட்டு) இங்கு பதியப்போகிறேன்.
copy...paste பண்ணப்போறேங்ண்ணா!!!!!