இதற்கு முன்பு அசோகமித்ரனின் கட்டுரைகளை வாசித்திருந்தாலும், இதுவே நான் படித்த அவருடைய முதல் நாவல்.வெகு நிதானமான எழுத்து. அனாவசியமான பரபரப்பினை எழுத்தின் மீது ஏற்றாமல் அந்தந்த நிகழ்விற்கேற்ப தீவிரம் கொள்ளச் செய்கிறார். இதில் ”செய்தி” படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அபாயம் இருந்தாலும், நாவல் முழுவதும் இழையோடும் மெல்லிய நகச்சுவையும், சுய எள்ளலும் அதிலிருந்து காப்பாற்றுகின்றன. ஒவ்வொரு நிகழ்வினையும் மிக நுணுக்கமாக விவரிக்கிறார். விவரிப்பில் ஒரு கிண்டல். உதாரணமாக அவர்கள் குடியிருந்த லான்ஸ் பாராக்ஸ் வீட்டினை இவ்வாறாக வர்ணிக்கிறார்.
// எப்போது கட்டியிருப்பார்களோ தேரியாது. பத்தடி உயரமுள்ள அரக்க உருவமுள்ளவர்களுக்காக அவற்றைக் கட்டியிருக்க வேண்டும்...ஒரு கதவுக்கும் ஸ்டூல் அல்லது நாற்காலி உதவி இல்லாமல் மேல் தாழ்ப்பாள் போடமுடியாது. வீட்டு நடுவில் கூரை இருபது இருபத்தைந்து அடிக்கு மேலே உயர்ந்து முன்பக்கம் பின்பக்கமாக சரிந்து வரும்.ஒவ்வொரு சுவரும் இரண்டடி பருமனுக்குக் குறையாது. வீட்டில் ஒட்டடையே அடிக்க முடியாது. அரைகுறை வெளிச்சத்தில் கூரையை அண்ணாந்து பார்த்தால் பயமாகக்கூட இருக்கும். வெள்ளைக்கார பட்டாளக்காரர்களுக்காக, அதுவும் ஈட்டி தாங்குபவர்களுக்காக என்று அகராதியில் பார்த்துத் தெரிந்தது. பட்டாளக்காரர்கள் ஒருவேளை எப்போதும் ஈட்டியைத் தாங்கியவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் ஈட்டி ஏகப்பட்ட நீளம் உடையதாக
இருக்கவேண்டும். ஈட்டி கூரையில் இடிக்கக்கூடாது என்றுதான் அவ்வளவு உயரமாகக் கட்டினார்களோ என்னவோ.//
இந்நாவலின் இந்தி மொழிபெயர்ப்பு வெளிவரும் முன்னர், மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டார் என அறிந்தபோது ஆச்சரியமாக இருந்த்தது. நாலாவது
அத்தியாயத்தில் அதற்குக் காரணம் தெரிந்தது “ஊரிலே எந்த ராஜாக்கார் தேவடியா மகன் சைக்கிளுக்கு லைட் ஏத்திண்டு போகிறான்? போலீஸ்காரன்
அவங்களைப் பிடிக்கறானா?”.
நாவல் கலவரத்தைப் பற்றியது தான் என்றாலும் கடைசி 4 அத்தியாயங்கள் தான் அதனைப்பற்றித் தீவிரமாகப் பேசுகின்றன. மற்றவற்றில் தெலுங்குதேசம் சென்று குடியேறிய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் சந்த்திரசேகரனின் பார்வையிலிருந்து கதை சொல்லப்படுகிறது. சந்திரசேகரனின் கிருஷ்ணசாமி சகோதர்களுடனான விரோதம், தற்கொலை செய்துகொண்டபின்
தன்னை பத்திரப்படுத்திக்கொள்ள இடம் தேடி அலைவது, சட்டைகாரர்களுடனான நட்பு, குடும்பத்துடன் படம் பார்க்கசெல்லும் வைபோகம், ஆழ்வார் தன் தமக்கைகளுக்கு பாட்டு சொல்லித்தருவது என ஒவ்வொன்றையும் சுவாரஸியமாக விவரிக்கிறார். குறிப்பாக சந்திரசேகரனை பிரின்ஸ்பால் மேடையில் பாட அழைக்கும் போது நிகழும் சம்பவங்களை படு நகைச்சுவையாக எழுதியுள்ளார். நாவலைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் இந்தப்பகுதியை முதலில் படித்தால் இது ஏதோ ஹாஸிய நாவல் என்றுதான் எண்ணவேண்டியிருக்கும். இந்த சம்பவஙள் அடங்கிய ஐந்து பக்கங்களை ஒரு நகச்சுவை சிறுகதையாகத் தர முடியும்.
//அன்று நான் அணிந்திருந்த ஷர்ட் மிகவும் சிறியது. இடுப்புவரைதான் இருந்தது. அதன் பக்கவாட்டிலுள்ள இரு பிளவுகள் வழியாக என் இடுப்பும் அதில் ஒரு தொளதொள நிக்கரை நான் சுற்றிசுற்றி இறுக வைத்திருப்பதையும் எல்லாரும் பார்க்கலாம். பார்த்தார்களோ தெரியாது. நான் என் ஷர்ட்டை இழுத்துப் பிடித்த வண்ணம் மேடை நோக்கி ஊர்ந்தேன். நிக்கர் ரொம்பப் பெரியது. அதன் கால்கள் இரண்டும் கோபியர்கள் பாவாடை மாதிரி படபடவென்று அடித்துக்கொண்டன. அந்த பிரமாண்ட நிக்கர் கால்கள் வழியாகக் குளிர்ந்த காற்று வீசியடித்து என் அடிவயற்றுப் பாகத்தை அப்படியே மரத்துப் போக வைத்த மாதிரி இருந்த்தது//
இறுதியில் லம்பாடிகள் நிஜாமியர்களால் கொல்லப்படுவது, காந்தியின் மறைவு, போர் தீவிரமடைந்து எங்கும் வெளியில் செல்லமுடியாமல்
தனிமைப்படுத்தப்படுவது பொன்றவையும் சொல்லப்படுகின்றன.இவை நிகழ்ந்து சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு அசோகமித்ரன் இந்நாவலை
எழுதியிருக்கின்றார். கண்முன் காட்சிகளை விரியச்செய்யும் நுண்ணிய விவரிப்பும், நிகழ்வுகளை நேர்மையுடன் பதிவு செய்திருக்கும் விதமும் இந்நாவலை தமிழின் தலை சிறந்த நாவல்களின் பட்டியலில் இடம்பெறச் செய்கின்றன.






Director :
Director :Navdeep Singh



Dear Sir,
"Bhool Bhulaiya " என்ற பெயரில் முழு நீள நகைச்சுவைப் படமாக வெளிவரவிருக்கிறது மணிசித்திரத்தாள்.
யாரும் தொடத்தயங்கும்,யாரும் அறியாத காந்தியின் மறுபக்கத்தை படமாக்கத் துணிந்ததற்காக இயக்குனரையும்(Feroz Abbas Khan),தயாரிப்பாளரையும்(Anil Kapoor) பாராட்டியே ஆகவேண்டும்.அதுவும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் அனில் கபூருக்கு இது முதல் படம்!
நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் கஸ்தூர்பா வாக வரும் ஷிவாலி சாயா.பெங்காலி நடிகைகளுக்கு நடிப்பு ரத்தத்தில் ஊறியிருக்கும் விஷயம் போல.இவர் இந்த படத்திற்காக சில விருதுகளை எதிர்பார்க்கலாம்.பூமிகாவின் நடிப்பும் நிறைவாக இருக்கிறது.